பதிவு செய்த நாள்
04 ஜூன்2012
10:09
காரைக்குடி:"நடப்பாண்டு வங்கிகள் மூலம் ரூ.5.75 லட்சம் கோடி வரை விவசாயக் கடனாக வழங்கப்படும்,'' என, காரைக்குடியில் உள்துறை அமைச்சர் சிதம்பரம் பேசினார்.அவர் பேசியதாவது:கச்சா எண்ணெய் வைத்துள்ள நாடுகள் தான் விலையை உயர்த்துகின்றன. இந்தியாவிற்கு 75 சதவீதம் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்ய வேண்டும். எண்ணெய் பீப்பாய் 120 டாலர் வரை உயர்ந்துவிட்டது. பெட்ரோலியப் பொருட்களுக்கு 2011- 2012ல் ரூ.1.38 லட்சம் கோடியை மானியமாக தந்துள்ளோம். உலகச் சந்தையில் விலை குறைந்தால் இங்கும் விலை குறைக்கப்படும்.நடப்பு ஆண்டிற்கு 5.75 லட்சம் கோடி ரூபாய் வரை விவசாயக் கடன் வழங்கப்படும். இதன் மூலம் 5.50 கோடி விவசாயிகள் பயன்பெறுவர். நாட்டில் 5 கோடியே 44 லட்சம் டன் அரிசி, கோதுமை கையிருப்பு உள்ளது.காங்., ஆட்சி பொறுப்பை தமிழகத்தில் வகிக்கவில்லை. இதற்கு முக்கிய காரணம் மக்களிடம் நாங்கள் நம்பிக்கையைப் பெறவில்லை. வேறு வழியின்றி மற்ற கட்சிகளுடன் கூட்டணி வைத்து வருகிறோம். ஒரு அரசு கொண்டுவரும் நல்ல திட்டங்களை அடுத்துவரும் அரசு புறக்கணிக்கக் கூடாது, என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|