பதிவு செய்த நாள்
04 ஜூன்2012
11:01
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் முதல் நாளான இன்று சரிவுடன் தொடங்கியது. இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கிய நேரத்தில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 161.62 புள்ளிகள் குறைந்து 15803.54 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 50.26 புள்ளிகள் குறைந்து 4791.35 புள்ளிகளோடு காணப் பட்டது.வெள்ளியன்று மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'சென்செக்ஸ்' 253 புள்ளிகள் சரிவடைந்து, மீண்டும் 16,000 புள்ளிகளுக்கும் கீழ் குறைந்து, 15,965 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'நிப்டி' 82 புள்ளிகள் குறைந்து, 4,842 புள்ளிகளிலும் நிலைகொண்டன. ஒட்டு மொத்த அளவில், நடப்பு வாரத்தில் 'சென்செக்ஸ்' 452 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது. இன்றைய வர்த்த நேர துவக்கத்தின் போது, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 55.58 ஆக இருந்தது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|