பதிவு செய்த நாள்
04 ஜூன்2012
12:07
தேனி:வெளிமார்க்கெட்டில் நெல் விலை உயர்ந்ததால், அரிசி விலை மூடைக்கு 200 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.நெல் அறுவடை முடிந்து விட்டதால், வெளி மார்க்கெட்டில் நெல் விலை அரசு கொள்முதல் விலையை விட உயர்ந்துள்ளது. இதனால் அரிசி விலையும் நூறு கிலோ மூடைக்கு 200 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. கர்நாடாகாவிலும் நெல் விலை உயர்வால் அரிசி விலை உயர்ந்துள்ளது.தேனி மார்க்கெட்டில் பொன்னி நூறு கிலோ மூடை 3 ஆயிரம் ரூபாய், இட்லி அரிசி 2,130 , செல்லப்பொன்னி 2,160 , ஐ.ஆர்., 20 ரக அரிசி 2,250, கர்நாடாகா பொன்னி 3,200 என விற்கப்படுகிறது. அனைத்து ரக எண்ணெய்களும் லிட்டருக்கு ஒரு ரூபாய் விலை உயர்ந்து காணப்பட்டது. பாமாயில் லிட்டருக்கு 61 ரூபாய், தேங்காய் எண்ணெய் 77, நல்லெண்ணெய் 142 , கடலை எண்ணெய் 112, ரீபைண்ட் ஆயில் 136க்கு விற்கப்படுகிறது.
பயறு, பருப்பு வகைகள் ஆன்லைன் வர்த்தகத்தால் கடந்த வாரம் விலை அதிகமாக உயர்ந்திருந்தன. மார்க்கெட்டில் விற்பனை மந்த நிலையில் உள்ளது. இதனால் இந்த வாரம் விலைகளில் மாற்றம் ஏதுமில்லை.வறுகடலை 55 கிலோ மூடை 3,830 ரூபாய், துவரம் பருப்பு நூறு கிலோ மூடை 5,780, கடலை பருப்பு 5,780, உடைசல் உளுந்து 4,230, உருட்டு உளுந்து 5,230, பாசிப்பருப்பு 5,230, பட்டாணி 3,280, கடலை மாவு 2,530 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஜீனி, ரவா, மைதா விலையிலும் மாற்றமில்லை.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|