பதிவு செய்த நாள்
05 ஜூன்2012
03:55
மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், வாரத்தின் தொடக்க தினமான திங்கள்கிழமையன்று அதிக ஏற்ற, இறக்கத்துடன் இருந்தது. இந்நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவடைந்து வருவதால், நாட்டின் பொதுப் பணவீக்கம் குறைந்து, பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் என, ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் சுபீர் கோக்ரன் தெரிவித்தார். இதையடுத்து, இம்மாதம் 18ம் தேதி நடைபெற உள்ள அதன் நிதி ஆய்வுக்கூட்டத்தில், வங்கிகளுக்கான "ரெப்போரேட்' :விகிதங்கள் குறைக்கப்படலாம் என்ற நிலைப்பாட்டால் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சூடுபிடித்தது.'
சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சி, மந்த நிலையில் உள்ளதாக செய்தி வெளியானதையடுத்து, ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சுணக்கம் கண்டது. நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், பொறியியல், ரியல் எஸ்டேட், வங்கி, எண்ணெய், எரிவாயு உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின. இருப்பினும், கெயில், ஏர்டெல் உள்ளிட்ட ஒரு சில நிறுவனப் பங்குகளின் விலை குறைந்து போனது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 23.24 புள்ளிகள் அதிகரித்து, 15,988.40 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக, 16,012.84 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 15,748.98 புள்ளிகள் வரையிலும் சென்றது.
"சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், 13 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தும், 17 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி' 6.55 புள்ளிகள் உயர்ந்து, 4,848.15 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 4,858.30 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 4,770.35 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|