தங்கம் விலை சற்று உயர்வுதங்கம் விலை சற்று உயர்வு ... புதிய பொருளாதார கொள்கை வெளியீடு: ஆனந்த் சர்மா புதிய பொருளாதார கொள்கை வெளியீடு: ஆனந்த் சர்மா ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
க்ஸ்யுவி 500 கார் முன்பதிவு ஜூன் 8 முதல் மீண்டும் துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஜூன்
2012
14:08

மஹிந்திரா நிறுவனத்தின், எக்ஸ்யுவி 500 என்ற கார், கடந்த ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. மஹாராஷ்டிரா மாநிலம், புனே அருகே உள்ள சாகன் தொழிற்சாலையில், இந்த கார் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த காருக்கு நல்ல வரவேற்பு இருந்ததால், அறிமுகப்படுத்தப்பட்ட, 10 நாட்களில், 8,000 பேர் முன்பதிவு செய்தனர். அப்போது, மும்பை, டில்லி, பெங்களூரு, சென்னை மற்றும் புனே ஆகிய நகரங்களில் மட்டுமே இந்த கார் கிடைத்தது. மாதத்துக்கு, 3000 கார்கள் உற்பத்தி என்ற அளவில், இரண்டு மாத உற்பத்திக்கு அதிகமாக முன்பதிவு இருந்ததால், அந்த ஆண்டு அக்டோபரில், முன்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மீண்டும், நடப்பு ஆண்டின்ஜனவரி 26ம் தேதி முதல், 10 நாட்களுக்கு மட்டும், முன்பதிவு நடந்தது. இதில், 19 நகரங்களில் கார் விற்பனைக்கு வந்தது. இந்த காருக்கு, 25,000 பேர் முன்பதிவு செய்தனர். அதில் குலுக்கல் முறையில், 7,200 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த சூழ்நிலையில், சாகன் தொழிற்சாலையில், எக்ஸ்யுவி 500 காரின் உற்பத்தி, மாதத்துக்கு, 4,000 கார்கள் என உயர்த்தப்பட்டுள்ளது. இன்னும் சில மாதங்களில், இது மாதத்துக்கு, 5,000 கார்கள் என அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் தொடர்ச்சியாக, ஜூன் 8ம் தேதி முதல், எக்ஸ்யுவி 500 காருக்கான முன்பதிவு மீண்டும் துவங்குகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, நாடு முழுவதும் இந்த கார் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த காரின் விலை, ரூ.11.68 லட்சத்தில் இருந்து ரூ.14.11 லட்சம் வரை உள்ளது. காரில், 2.2 லிட்ட் டர்போ டீஸல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. ஃபோர் வீல் டிரைவ் வசதியுடனும் இந்த கார் கிடைக்கும். 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வசதி கொண்டது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)