பதிவு செய்த நாள்
05 ஜூன்2012
15:17
புதுடில்லி : புதிய பொருளாதார கொள்கையை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது. டில்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் ஆனந்த் சர்மா இதனை தெரிவித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது : அரசு உதவி திட்டத்தை 2013 ம் ஆண்டு மார்ச் 31 வரை நீடிக்க அரசு முடிவு செய்துள்ளது; பொம்மைகள், விளையாட்டு பொருட்கள், விவசாய விளை பொருட்கள், ரெடிமேட் ஆடைகள் உள்ளிட்ட தொழிலாளர்களை அதிகம் கொண்ட துறைகளுக்கான காப்புறுதி பாதுகாப்பு விரிவுபடுத்தப்படும்; 7 முக்கிய கொள்கைகளின் அடிப்படையில் இந்த விரிவாக்க திட்டங்கள் நிறைவேற்றப்படும்; இதன் மூலம் நாட்டின் ற்றுமதி வளர்ச்சி 20 சதவீதம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது; 2011-12ம் ஆண்டில் நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சி 21 சதவீதமாக இருந்தது; ஏற்றுமதிகளை ஊக்குவிப்பதற்காக கைவினைப் பொருட்கள், சிறு மற்றும் குறு தொழில்கள் உள்ளிட்ட துறைகளுக்கான காப்புறுதி பாதுகாப்பு வட்டி விகிதம் 2 ஆக உயர்த்தப்படும். இவ்வாறு ஆனந்த் சர்மா தெரிவித்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|