பதிவு செய்த நாள்
06 ஜூன்2012
00:29
மும்பை:நாட்டின் பங்கு வியாபாரம் செவ்வாய்கிழமையன்று ஏற்ற, இறக்கத்துடன் இருந்தது. இந்நிலையில், சில்லரை முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளில் முதலீடு செய்ததையடுத்து, பங்குச் சந்தை ஏற்றத்துடன் முடிவடைந்தது.ஐரோப்பிய நாடுகளில், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்ற நிலைப்பாட்டால், ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சூடுபிடித்தது.நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், பொறியியல், வங்கி, மின்சாரம், எண்ணெய் மற்றும் எரிவாயு உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின.
இருப்பினும், ரியல் எஸ்டேட், நுகர் பொருட்கள், நுகர்வோர் சாதனங்கள், உலோகம் உள்ளிட்ட ஒரு சில துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்து போனது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 32.24 புள்ளிகள் அதிகரித்து, 16,020.64 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக, 16,138.29 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 15,979.77 புள்ளிகள் வரையிலும் சென்றது.'சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், 18 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், 12 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 'நிப்டி' 15.15 புள்ளிகள் உயர்ந்து, 4,863.30 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 4,898.95 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 4,847.70 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|