புதிய வெளிநாட்டு வர்த்தக கொள்கை அறிவிப்பு:ஏற்றுமதியை ஊக்குவிக்க பல்வேறு சலுகை திட்டங்கள்புதிய வெளிநாட்டு வர்த்தக கொள்கை அறிவிப்பு:ஏற்றுமதியை ஊக்குவிக்க பல்வேறு ... ... தங்கம் விலை சிறிது உயர்வு தங்கம் விலை சிறிது உயர்வு ...
விற்பனையை அதிகரிக்க ஆவின் புதிய பார்முலா!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஜூன்
2012
10:39

சென்னை: நெய், வெண்ணெய் விற்பனையை ஆவின் நிறுவனம் தீவிரப்படுத்தியுள்ளது. பால் கொள்முதல் செய்து விற்பனை செய்வதில் கிடைக்கும் லாபத்தை விட, கூடுதல் லாபம் பால் உபபொருட்கள் விற்பனையில் கிடைப்பதால், இந்த பார்முலாவை, ஆவின் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. நாட்டில் பெரும்பாலான பால் பண்ணைகளும், இந்த பார்முலாவைத் தான் பின்பற்றியும் வருகின்றன. தமிழக அரசு அறிவித்துள்ள இரண்டாவது பசுமை புரட்சிக்கு, இந்த புதிய பார்முலா ஏற்றதாக உள்ளது என, ஆவின் நிறுவன மூத்த அதிகாரி ஒருவர் கூறுகிறார்.

22 லட்சம் லிட்டர்: ஆவின் நிறுவனம் ஆண்டு சராசரியாக, நாள் ஒன்றுக்கு, 22 லட்சம் லிட்டர் பாலை கொள்முதல் செய்கிறது. 2010 மே மாதத்தில், பால் கொள்முதல் 22.19 லட்சம் லிட்டராக இருந்தது. இக்கொள்முதல், கடந்த ஆண்டு மே மாதத்தில், 25.08 லட்சமாக அதிகரித்துள்ளது. தமிழக அரசு இலவசமாக வழங்கியுள்ள கறவை மாடுகள் மூலம், 32 ஆயிரம் லிட்டர் பால் கூடுதலாகக் கிடைத்துள்ளது. மேலும், மாதம் ஒன்றுக்கு பால் கொள்முதல் இலக்கை, 28 லட்சமாக உயர்த்தவும், ஆவின் இலக்கு நிர்ணயித்துள்ளது. கூடுதல் லாபத்துக்காக மட்டும் பால் கொள்முதலை அதிகரிக்கவில்லை. அதிலிருந்து கிடைக்கும் உபபொருட்களான நெய், வெண்ணெய், பால்கோவா போன்றவற்றின் விற்பனை மூலமும் லாபத்தை அதிகரிக்க திட்டமிட்டு உள்ளோம் என, ஆவின் அதிகாரிகள் கூறுகின்றனர்.

நெய்: சென்னை மாநகரில், கடந்த 2010 மே மாதத்தில் மட்டும், 41 ஆயிரம் கிலோ நெய் மற்றும் வெண்ணெயை ஆவின் விற்பனை செய்துள்ளது. இந்த விற்பனை கடந்த மே மாதத்தில், 60 ஆயிரம் கிலோவாகவும், 47 ஆயிரம் கிலோவாகவும் உயர்ந்துள்ளது. சென்னையைத் தவிர, மாவட்டங்களில் உள்ள பால் கூட்டுறவு ஒன்றியங்கள் மூலம், 41,700 கிலோ நெய்யும், 53 ஆயிரம் கிலோ வெண்ணையும், 2010 மே மாதத்தில் விற்பனையாகியுள்ளன. இந்த விற்பனை, கடந்த மே மாதத்தில், 61 ஆயிரம் கிலோவாகவும், 7,635 கிலோவாகவும் இருந்தது. பால் மற்றும் அதன் உபபொருட்கள் விற்பனை, 2010 மே மாதத்தில், 3.6 கோடி ரூபாயாக இருந்தது. கடந்த மே மாதத்தில், 6.2 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

இரு மடங்கு: ஆவின் மூலம் கடந்த இரு மாதங்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட, ""மேங்கோ மில்க ஷேக்'' பாக்கெட்கள் விற்பனை வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சென்னை மாநகரில், கடந்த மே மாதம் மட்டும், ""மேங்கோ மில்க ஷேக்'' விற்பனை, 40,000 பாக்கெட்களாக இருந்தது. இந்த விற்பனையை இரு மடங்காக உயர்த்தவும், ஆவின் திட்டமிட்டுள்ளது. ""மேங்கோ மில்க் ஷேக்'' பாக்கெட்கள் தயாரிப்பதற்காக, சேலம் மாவட்ட பால் கூட்டுறவு ஒன்றியத்தில், 3.7 கோடி ரூபாயில் புதிய இயந்திரம் வாங்கப்பட்டு உள்ளது. பால் உபபொருட்கள் விற்பனைக்காக, அம்பத்தூர் ஆவின் நிலையம் அருகே, 1.2 கோடி ரூபாயில் புதிய விற்பனையகம் துவங்கப்பட்டு உள்ளது. இந்த விற்பனையகத்தில், ஐஸ்கிரிம், மைசூர்பாகு, குல்பி ஆகியனவும் விற்பனை செய்யப்படுகின்றன. இதற்காக மட்டும் நாளொன்றுக்கு, 10 ஆயிரம் லிட்டம் பால் செலவிடப் படுகிறது. இதை, 20 ஆயிரம் லிட்டராக உயர்த்துவும் திட்டமிட்டுள்ளோம். கோவை, ஈரோடு, திருச்சி, மதுரை ஆகிய பால் கூட்டுறவு ஒன்றியங்களும், பால் உபபொருட்கள் விற்பனையை அதிகரித்து வருகின்றன.

சென்னை மாநகரில் உள்ள 40 ஆவின் விற்பனை மையங்களின் எண்ணிக்கையை, 60ஆக உயர்த்தவும், 150 பால் பூத்களை 185ஆக அதிகரிக்கவும் திட்டமிடப் பட்டுள்ளது. இதுதவிர, விரைவில் நடமாடும் "பார்லர்களும்'' அறிமுகம் செய்யப்பட உள்ளன என்றும், ஆவின் நிறுவன அதிகாரிகள் கூறுகின்றனர்.

- நமது நிருபர் -

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)