பதிவு செய்த நாள்
06 ஜூன்2012
12:34
புதுடில்லி : ஏர் இந்தியா விமான பைலட்டுகள் போராட்டத்தை கைவிட்டால் அவர்களை எந்த நிபந்தனையும் இன்றி ஏற்க தயார் என மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் அஜித் சிங் தெரிவித்துள்ளார். ட்ரீம்லைனர் விமான பயிற்சி, பணி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏர்இந்தியா பைலட்டுகள் கடந்த ஒரு மாதமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். பணிக்கு திரும்புமாறு வலியுறுத்தியும் அவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்துள்ளனர். ஏற்கனவே நஷ்டத்தில் சிக்கி தவித்து வரும் ஏர் இந்தியா நிறுவனம், விமானிகளின் போராட்டத்தால் ஒரு மாதத்தில் பல கோடி ரூபாய்க்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் டில்லியில் செய்தியாளர்களை சந்தித்த அஜித் சிங் கூறியதாவது, பல்வேறு நெருக்கடி நிலையிலும் ஏர்இந்தியா பணியாளர்களுக்கு ஆதரவாக நான் இருந்துள்ளேன். மே மாத துவக்கத்தில் உள்நாட்டு விமானிகளின் எண்ணிக்கை 26 ஆயிரமாக உள்ளது. இதனை தொடர்ந்து தக்க வைத்து கொள்ள நான் விரும்புகிறேன். இதுதவிர ஹாங்காங், சியோல் உள்ளிட்ட நாடுகளுக்கும் புதிய விமான போக்குவரத்தை துவக்க திட்டமிட்டுள்ளோம். இந்தசமயத்தில் ஏர் இந்தியா பைலட்டுகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். விமானிகள் தங்களது போராட்டத்தை கைவிட தயாராக இருந்தால் எவ்வித நிபந்தனையும் இன்றி அவர்களை ஏற்க தயாராக உள்ளோம். ஏர்இந்தியா நிறுவனத்தை தனியார் மயமாக்கும் திட்டம் ஏதும் இல்லை; ஏஜென்சிகள் மற்றும் விளம்பரங்கள் மூலம் விமானிகளை தேர்வு செய்யும் திட்டம் ஏர் இந்தியாவிற்கு உள்ளது; ஏர்இந்தியாவை பொருத்தவரை விமானிகளின் வேலை நிறுத்த போராட்டம் முடிந்து விட்டது; போதிய அவகாசம் கொடுத்த பிறகும் அவர்கள் போராட்டத்தை கைவிட தயாராக இல்லை; சர்வதேச விமான சேவையை தக்க வைத்து கொள்வதுடன் அதனை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அஜித்சிங் தெரிவித்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|