பதிவு செய்த நாள்
06 ஜூன்2012
13:57
ஆமதாபாத் : கார் உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டு மாருதி சுசூகி நிறுவனம் குஜராத்தில் ரூ.4 ஆயிரம் கோடியில் புதிய தொழிற்சாலையை அமைக்கவுள்ளது. இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசூகி நிறுவனம் டில்லியை அடுத்துள்ள குர்கான் மற்றும் ஹரியாணா மாநிலம் மானேசரிலும் தொழிற்சாலை அமைத்துள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு 15லட்சம் கார்களை தயாரித்து வருகிறது. இந்நிலையில் இதன் எண்ணிகையை 20 லட்சமாக உயர்த்த எண்ணியுள்ளது. அதற்காக குஜராத்தில் புதிதாக தொழிற்சாலை அமைக்க இருக்கிறது. இதற்காக அந்நிறுவனம் ரூ.4 ஆயிரம் கோடி முதலீடு செய்ய இருக்கிறது. இதற்காக சுமார் 700 ஏக்கர் நிலத்தை அம்மாநில அரசு ஒதுக்கியுள்ளது. இதற்கான ஒப்பந்தம் சில தினங்களுக்கு முன்னர் கையெழுத்தானது.
குஜராத் மாநிலம் மெஹ்சானாவில் அமையவுள்ள புதிய ஆலையின் உற்பத்தித் திறன் படிப்படியாக அதிகரிக்கப்படும். முதல் கட்டமாக இந்த ஆலை ஆண்டுக்கு 2.5 லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இருக்கும். புதிய ஆலைக்கான பணிகள் 2015-16-ம் ஆண்டில் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|