பதிவு செய்த நாள்
06 ஜூன்2012
17:28
மும்பை : 2012ம் ஆண்டில் முதன்முறையாக 434 புள்ளிகள் உயர்வுடன் முடிந்து இருக்கிறது மும்பை பங்குசந்தை. காலையில் 170 புள்ளிகள் உயர்வுடன் தொடங்கிய பங்குவர்த்தகம் மதியத்திற்கு பிறகு தொடர்ந்து அதிகரிக்க தொடங்கியது. வர்த்தக நேர முடிவின் போது மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 433.66 புள்ளிகள் உயர்ந்து 16,454.30-ஆகவும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 133.80 புள்ளிகள் உயர்ந்து 4,997.10-ஆகவும் காணப்பட்டது. இந்தாண்டில் சென்செக்ஸ் இவ்வளவு புள்ளிகள் உயர்ந்து இருப்பது இதுவே முதல்முறையாகும்.
ஐரோப்பா மற்றும் ஆசிய பங்குசந்தைகளில் காணப்பட்ட சுணக்கம் காரணமாக கடந்த சில வாரங்களாக கடும் சரிவை சந்தித்து வந்த இந்திய பங்குசந்தைகள் நேற்று மத்திய அரசு வெளியிட்ட ஏற்றுமதிக்கான புதிய தொழில் கொள்கையால் காலையிலேயே ஏற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து ஆசிய மற்றும் ஐரோப்பா பங்குசந்தைகளில் ஏற்பட்ட முன்னேற்றம், தொழில்துறையில் முதலீடு மற்றும் மறுசீரமைப்பு தொடர்பாக மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி மேற்கொண்ட நடவடிக்கை மற்றும் இந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள சுணக்கம் காரணமாக அமைச்சர்கள் தலைமையில் பிரதமர் மேற்கொள்ள இருக்கும் கூட்டம் போன்ற காரணங்களால் இந்திய பங்குசந்தைகள் மதியத்திற்கு மேல் சூடுபிடிக்க தொடங்கியது. மதியம் 3 மணி அளவில் மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் அதிகபட்சமாக 474 புள்ளிகள் உயர்ந்தும், நிப்டி 5000-ஐயும் தொட்டது.
இந்திய பங்குசந்தையை அளவிட உதவும் 30 பங்குகள் அனைத்து இன்று அதிகளவிலான லாபம் பெற்றன. இதனால் முதலீட்டாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி தந்தது இன்றைய பங்குவர்த்தகம்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|