பதிவு செய்த நாள்
07 ஜூன்2012
00:55
புதுடில்லி:சென்ற 2011ம் ஆண்டில், சர்வதேச அளவில் நெல் உற்பத்தி, 48 கோடி டன்னாக அதிகரித்துள்ளது. இது, 2010ம் ஆண்டில், மேற்கொள்ளப்பட்ட உற்பத்தியை விட, 2.6 சதவீதம் (46.80 கோடி டன்) அதிகமாகும். இந்தியா வில், இதன்உற்பத்தி அதிகரித்ததே இதற்கு முக்கிய காரணமாகும் என,அமெரிக்க உணவு மற்றும் வேளாண் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
நடப்பு 2011-12 வேளாண் பருவத்தில்( ஜூலை-ஜூன்), இந்தியாவின், நெல் உற்பத்தி, 10.34 கோடி டன்னாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில், நெல் உற்பத்தி,10 கோடி டன்னை தாண்டுவது இதுவே முதல் முறை. சென்ற பருவத்தில், இதன் உற்பத்தி, 9.68 கோடி டன் என்றளவில் இருந்தது.
சீனா, பாகிஸ்தான் மற்றும் வியட்நாம் ஆகிய இதர ஆசிய நாடுகளிலும், அதிகளவில் நெல் அறுவடை செய்யப் பட்டது. மேலும், கம்போடியா, மலேசியா, நேபாளம், பிலிப்பைன்ஸ் நாடுகளில், இதன் உற்பத்தி சிறப்பாக இருந்தது.நடப்பாண்டில், சர்வதேச நெல் உற்பத்தி, 48.80 கோடி டன்னாக இருக்கும் என, இந்த கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|