சர்வதேச நெல் உற்பத்தி 48 கோடி டன்னாக உயர்வுசர்வதேச நெல் உற்பத்தி 48 கோடி டன்னாக உயர்வு ... நெல்லுக்கான ஆதரவு விலையை உயர்த்தமத்திய உணவு அமைச்சகம் எதிர்ப்பு நெல்லுக்கான ஆதரவு விலையை உயர்த்தமத்திய உணவு அமைச்சகம் எதிர்ப்பு ...
மின் துறைக்கு 60 சதவீத நிலக்கரி: கோல் இந்தியா ஒப்புதல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஜூன்
2012
01:02

புதுடில்லி:கோல் இந்தியா நிறுவனம், மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு, 60 சதவீத நிலக்கரியை மட்டுமே வழங்க முடியும் என தெரிவித்துள்ளது.இது குறித்து மத்திய மின்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:கோல் இந்தியா, 80 சதவீத நிலக்கரியை மின் நிறுவனங்களுக்கு வழங்க இயலாது என தெரிவித்துள்ளது.
60 சதவீத நிலக்கரியைமட்டுமே தற்போது வழங்க முடியும் என்றும், இது, அடுத்த நான்கு ஆண்டுகளில், 80 சதவீதமாக உயர்த்தப்படும் என்றும் கூறியுள்ளது. இதன்படி, கடந்த 2009ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு பிறகு செயல் படத் துவங்கிய மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு நிலக்கரி வழங்கப்படும்.
ஒப்பந்தம்:மின் உற்பத்தி நிறுவனங்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி,கோல் இந்தியா குறைந்தபட்சம்80 சத வீத நிலக்கரியை வழங்க வேண்டும்.ஆனால், இந்த ஒப்பந்தத்தை முழுமையாக செயல்படுத்த முடியாத நிலை யில், கோல் இந்தியா உள்ளது. குறைந்தபட்சம் 65 சதவீத நிலக்கரியை மின் நிறுவனங்களுக்கு கோல் இந்தியா வழங்க வேண்டும் என, மத்திய மின் அமைச்சகம்கேட்டுக்கொண்டுள்ளது.
ஒப்பந்தப்படி, குறித்த காலத்தில் நிலக்கரி வழங்காவிட்டால், கோல் இந்தியா நிறுவனத்திற்கு, 0.01 சதவீதம் அபரா தம் விதிக்க, ஒப்பந்தம் வகை செய்கிறது. எனினும், ஒப்பந்தம் கையொப்பமான மூன்று ஆண்டுகளுக்கு பிறகு தான் இது நடைமுறைக்கு வரும். இவ்வாறு அவர் கூறினார்.
நிலக்கரி உற்பத்தி:பொது துறையை சேர்ந்த கோல் இந்தியா நிறுவனம், தற்போது 43.60 கோடி டன் நிலக்கரியை உற்பத்தி செய்கிறது. இந்நிறுவனம், நடப்பு 2012-13ம் நிதியாண்டில், நிலக்கரி உற்பத்தியை 46.40 கோடி டன்னாக உயர்த்தவும், இதில், மின் நிறுவனங்களுக்கு 34.70 கோடி டன் வழங்கவும் திட்டமிட்டுள்ளது.நிலக்கரி விற்பனை தொடர்பான ஒப்பந்தத்தில் உள்ள ஒரு சிலவிதிமுறைகளுக்கு, என்.டி.பி.சி. உள்ளிட்ட பல மின் நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.இதனால் இந்நிறுவனங்கள் ஒப்பந்தத்தில் கையொப்பமிடவில்லைஎன்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)