ஊரக வங்கிகளுக்கு, அரசு ரூ.632 கோடி பங்கு மூலதனம்ஊரக வங்கிகளுக்கு, அரசு ரூ.632 கோடி பங்கு மூலதனம் ... கடந்த 2011-12ம் நிதி ஆண்டில் நாட்டின் யூரியா உர இறக்குமதி 78 லட்சம் டன் கடந்த 2011-12ம் நிதி ஆண்டில் நாட்டின் யூரியா உர இறக்குமதி 78 லட்சம் டன் ...
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ரூ.1 லட்சம் கோடியில் முதலீட்டு திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஜூன்
2012
00:33

மும்பை:ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், பெட்ரோலிய ரசாயனங்கள், எண்ணெய் மற்றும் எரிவாயு, தொலைதொடர்பு மற்றும் புதிய வர்த்தகங்களில், 1 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.இந்நிறுவனத்தின், 38வது ஆண்டு பங்குதாரர்கள் கூட்டம் மும்பையில் நடைபெற்றது.
இதில், நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி கலந்து கொண்டு பேசியதாவது:அடுத்த இரண்டு அல்லது மூன்றுஆண்டுகளில் பெட்ரோலிய ரசாயன பொருட்கள் மற்றும் சுத்திகரிப்பு துறையில் புதிய திட்டங்கள் மேற்கொள்ளப்படும். அடுத்த மூன்று ஆண்டுகளில், நிறுவனத்தின் சில்லரை விற்பனை பிரிவு, குறிப்பிடத்தக்க அளவிற்கு, லாபம் ஈட்டும் பிரிவாக உருவாகும். சுத்திகரிப்பு துறை, நிறுவனத்தின் லாப வரம்பில், 30-40 சதவீத பங்களிப்பை கொண்டிருக்கும்.4ஜி தொழில்நுட்பத்திலான தொலைதொடர்பு சேவையை வர்த்தக ரீதியில் துவங்குவதற்கான பணிகள் முடியும் நிலையில் உள்ளன. நாடு முழுவதும் டிஜிட்டல் சேவையை வழங்க உள்ளோம்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில், நிறுவனத்தின் எரிவாயு உற்பத்தி 3,000 கன அடியில் இருந்து, 10 மடங்கு உயரும்.பல்வேறு திட்டங்களுக்காக, 1 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்த பிறகும், நிறுவனத்தின் நிதி நிலை, இந்தியாவில் மட்டுமின்றி, உலகளவில் வலுவானதாக விளங்கும். நிறுவனத்தின் செயல்பாட்டு லாபம், அடுத்த நான்கு அல்லது ஐந்தாண்டுகளில் இரு மடங்காக உயரும்.இந்தியா தற்போது சந்தித்து வரும் பொருளாதார நெருக்கடி தற்காலிகமானது. நம் நாடு எத்தகைய இடர்பாட்டையும் சுலபமாக சமாளித்து, வலிமை மிக்கதாக உருவாகும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு முகேஷ் அம்பானி தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)