பதிவு செய்த நாள்
08 ஜூன்2012
00:33
மும்பை:ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், பெட்ரோலிய ரசாயனங்கள், எண்ணெய் மற்றும் எரிவாயு, தொலைதொடர்பு மற்றும் புதிய வர்த்தகங்களில், 1 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.இந்நிறுவனத்தின், 38வது ஆண்டு பங்குதாரர்கள் கூட்டம் மும்பையில் நடைபெற்றது.
இதில், நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி கலந்து கொண்டு பேசியதாவது:அடுத்த இரண்டு அல்லது மூன்றுஆண்டுகளில் பெட்ரோலிய ரசாயன பொருட்கள் மற்றும் சுத்திகரிப்பு துறையில் புதிய திட்டங்கள் மேற்கொள்ளப்படும். அடுத்த மூன்று ஆண்டுகளில், நிறுவனத்தின் சில்லரை விற்பனை பிரிவு, குறிப்பிடத்தக்க அளவிற்கு, லாபம் ஈட்டும் பிரிவாக உருவாகும். சுத்திகரிப்பு துறை, நிறுவனத்தின் லாப வரம்பில், 30-40 சதவீத பங்களிப்பை கொண்டிருக்கும்.4ஜி தொழில்நுட்பத்திலான தொலைதொடர்பு சேவையை வர்த்தக ரீதியில் துவங்குவதற்கான பணிகள் முடியும் நிலையில் உள்ளன. நாடு முழுவதும் டிஜிட்டல் சேவையை வழங்க உள்ளோம்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில், நிறுவனத்தின் எரிவாயு உற்பத்தி 3,000 கன அடியில் இருந்து, 10 மடங்கு உயரும்.பல்வேறு திட்டங்களுக்காக, 1 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்த பிறகும், நிறுவனத்தின் நிதி நிலை, இந்தியாவில் மட்டுமின்றி, உலகளவில் வலுவானதாக விளங்கும். நிறுவனத்தின் செயல்பாட்டு லாபம், அடுத்த நான்கு அல்லது ஐந்தாண்டுகளில் இரு மடங்காக உயரும்.இந்தியா தற்போது சந்தித்து வரும் பொருளாதார நெருக்கடி தற்காலிகமானது. நம் நாடு எத்தகைய இடர்பாட்டையும் சுலபமாக சமாளித்து, வலிமை மிக்கதாக உருவாகும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு முகேஷ் அம்பானி தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|