பதிவு செய்த நாள்
08 ஜூன்2012
00:34
புதுடில்லி:சென்ற 2011-12ம் நிதியாண்டில், இந்தியா, உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து, 78 லட்சத்து 34 ஆயிரம் டன் யூரியா உரத்தை இறக்குமதி செய்துள்ளது. இது, முந்தைய 2010-11ம் நிதியாண்டில், மேற்கொள்ளப்பட்ட இறக்குமதியை விட, 18.5 சதவீதம் அதிகம் என, அரசுத் துறை வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உற்பத்தி:உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்யும் அளவிற்கு, ரசாயன உரங்கள் உற்பத்தி இல்லாததால், இவை பெருமளவில், இறக்குமதி செய்யப்படுகிறது. வேளாண் உற்பத்தியை அதிகரிக்க, உர பயன்பாடு மிகவும் அவசியமாக உள்ளது.சென்ற நிதியாண்டில், இந்தியா, சராசரியாக, ஒரு டன் யூரியாவை, 481.74 டாலருக்குவாங்கியது. இது, முந்தைய நிதியாண்டில் வாங்கப்பட்ட தொகையை விட, 47.10 சதவீதம் அதிகமாகும்.
இறக்குமதி மதிப்பு:சென்ற நிதியாண்டில், நாட்டின் யூரியா இறக்குமதி மதிப்பு, 377 கோடி டாலராக (18 ஆயிரத்து 850 கோடி ரூபாய்) இருந்தது.கடந்த 2010-11ம் நிதியாண்டில், நாட்டின் மொத்த யூரியா இறக்குமதியில், சீனாவின் பங்களிப்பு, 38 சதவீதமாக இருந்தது. ஆனால், சென்ற நிதியாண்டில், ஓமன் நாட்டிலிருந்து மேற்கொள்ளப்பட்ட உர இறக்குமதி, 24 லட்சம் டன்னிற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. ஓமன் நாட்டுடன், இந்தியா மேற்கொண்டுள்ள நீண்ட கால, ஒப்பந்தத்தால், அந்நாட்டிலிருந்து, உர இறக்குமதி அதிகரித்துள்ளது.
உர இறக்குமதியில், ஓமன் நாட்டை அடுத்து, ஈரானும், சீனாவும் உள்ளன. மேற்கண்ட இரு நாடுகளின் பங்களிப்பு முறையே, 25.5 சதவீதம் மற்றும் 16.3 சதவீதம் என்றளவில் உள்ளது. மேலும், காமன்வெல்த் குடியரசு நாடுகளிலிருந்து, மேற்கொள்ளப்படும் உர இறக்குமதி, 14.1 சதவீதம் என்றளவில் உள்ளது.
மலேசியா:மேற்கண்ட நாடுகள் தவிர, சென்ற நிதியாண்டில், ரஷ்யா, சவுதி அரேபியா, கத்தார், இந்தோனேஷியா, குவைத், பஹ்ரெய்ன், வியட்நாம், ருமேனியா, ஐக்கிய அரபு நாடுகள், மலேசியா ஆகிய நாடுகளிலிருந்தும் குறிப்பிடத்தக்க அளவிற்கு யூரியா உரம் இறக்குமதி ஆகியுள்ளது.இந்தியா, இதற்கு முன்பாக எகிப்து, லாட்வியா, லிபியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளிலிருந்து உரங்களை இறக்குமதி செய்து வந்ததுவந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|