பதிவு செய்த நாள்
08 ஜூன்2012
00:36
மத்திய அரசு, டீசல் கார்களுக்கு சிறப்பு கூடுதல் வரி விதிப்பது குறித்து பரிசீலித்து வருகிறது. இது அமலுக்கு வந்தால், கார் தயாரிப்பு நிறுவனங்களின், பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டுத் திட்டங்கள் முடங்கும் அபாயம் எழுந்துள்ளது.கச்Œõ எண்ணெ#கடந்த 2010ம் ஆண்டு ஜூன் மாதம், மத்திய அரசு பெட்ரோல் விலை மீதான கட்டுப்பாடுகளை நீக்கியது. அது முதல், சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையை, இரு வாரங்களுக்கு ஒரு முறை நிர்ணயித்து வருகின்றன.
இதையடுத்து, கடந்த ஒன்றரை ஆண்டுகளில், பெட்ரோல் விலை பல முறை உயர்த்தப்பட்டது. இறுதியாக, கடந்த மே மாதம், பெட்ரோல் விலை, லிட்டருக்கு 7.50 ரூபாய் உயர்த்தப்பட்டது.பெட்@ரால் விலை:இந்த விலை உயர்வுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து, நடப்பு ஜூன் மாத தொடக்கத்தில், பெட்ரோல் விலை, லிட்டருக்கு 2 ரூபாய் குறைக்கப்பட்டது. எனினும், விலை உயர்வை முழுவதுமாக திரும்பப் பெறவேண்டும் என அனைத்துக் கட்சிகளும் அரசை வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், மானிய விலையில் வழங்கப்படும் டீசல் பயன்பாட்டை குறைக்கவும், வரி வருவாயை அதிகரிக்கும் நோக்கிலும், டீசல் கார்களுக்கான உற்பத்தி வரியை உயர்த்துவது குறித்து பரிசீலித்து வருவதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.அதே சமயம் டீசல் விலையை உயர்த்தினால், அது பணவீக்க உயர்வுக்கு வழி வகுத்துவிடும் என மத்திய அரசு அஞ்சுகிறது. அதனால், டீசல் விலையை உடனடியாக உயர்த்தும் திட்டமில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கூடுதல் வரி:இந்நிலையில், டீசல் விலையை உயர்த்தாமல், டீசல் வாகனங்களுக்கு மட்டும் சிறப்பு கூடுதல் உற்பத்தி வரியாக தலா 80 ஆயிரம் ரூபாய் விதிக்க வேண்டும் என்று பெட்ரோலிய அமைச்சகம், நிதியமைச்சகத்திடம் யோசனை தெரிவித்துள்ளது.இதையடுத்து, விரைவில் டீசல் கார்களுக்கு கூடுதல் உற்பத்தி வரி விதிக்கப்படும் என்று தெரிகிறது.மத்திய அரசின் இத்தகைய நடவடிக்கைக்கு, கார் தயாரிப்பு நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
ஏற்கெனவே கடந்த சில மாதங்களகாக கார் உள்ளிட்ட வாகன விற்பனை சரிவடைந்து வரும் நிலையில், புதிய வரி விதிப்பால், மோட்டார் வாகனத் துறை கடுமையாகப் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மகிந்திரா நிறுவனம்:டீசல் கார்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்பட்டால், 4,000 கோடி ரூபாயில் மேற்கொள்ள உள்ள புதிய டீசல் கார் தொழிற்சாலை அமைக்கும் திட்டத்தை கைவிடப் போவதாக மகிந்திரா அண்டு மகிந்திரா நிறுவனம் அறிவித்துள்ளது. இத்தொழிற்சாலையை தமிழ்நாடு, மகாராஷ்ட்ரா உள்ளிட்ட மாநிலங்களில் அமைப்பது குறித்து, இந்நிறுவனம் பரிசீலித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனம் அதன் திட்டத்தை கைவிட்டால், ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகள் பறிபோகும் என்பதுடன், வாகனத் துறையில் அயல்நாட்டு முதலீடுகளும் குறைந்து போகும் அபாயம் உள்ளது.
மாருதி சுசூகி :கடந்த 2010ம் ஆண்டு ஜூன் மாதம் முதல், டீசல் கார்களின் விற்பனை அதிகரித்து வருகிறது. பெட்ரோல் விலை உயர்வு காரணமாக, இவ்வகை எரிபொருளில் இயங்கும் கார்களின் விற்பனை குறைந்து வருகிறது.தற்போது,பெட்ரோலுக்கும், டீசலுக்கும், லிட்டருக்கு 30 ரூபாய் வித்தியாசம் உள்ளதால், பெட்ரோல் வாகனங்களின் விற்பனை பெரிதும் மந்தமடைந்துள்ளது.
இந்தியாவில் கார் விற்பனையில் முதலிடத்தில் உள்ள மாருதி சுசுகி நிறுவனம், அதன் ஆல்டோ, வேகன் ஆர் உள்ளிட்ட ஒரு சில பெட்ரோல் கார்களின் உற்பத்தியைக் குறைத்துக் கொண்டுள்ளது.இந்நிறுவனம், கடந்த வாரம், அதன் கூர்கான் தொழிற்சாலையை மூன்று நாட்கள் மூடியது. இதனால், இதன் மாதாந்திர பெட்ரோல் கார்களின் உற்பத்தி 8 சதவீதம் குறைந்துள்ளது. அதாவது, இந்த மூன்று நாட்களில் 8,000 கார்கள் என்ற எண்ணிக்கையில் இதன் கார்கள் உற்பத்தி குறைந்துள்ளது.
இந்நிறுவனம் மற்றும் முகவர்களிடம் 1 லட்சத்து 40 ஆயிரம் கார்கள் கையிருப்பில் உள்ளன. இவற்றில் பெரும்பாலான வாகனங்கள் பெட்ரோலில் இயங்கக் கூடியவை என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிறுவனம், டீசல் கார்கள் தயாரிப்பில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. இதற்காக பீயட் இந்தியா நிறுவனத்துடன் மாதம் ஒன்றுக்கு, 9,000 டீசல் இன்ஜின்களை பெறும் வகையில் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
முதலீடுமேலும், 1,700 கோடி ரூபாய் முதலீட்டில், அதன் கூர்கான் டீசல் இன்ஜின் தொழிற்சாலையின் உற்பத்தியை வரும் 2014ம் ஆண்டில் 6 லட்சமாக உயர்த்தவும் திட்டமிட்டுள்ளது.இது போன்று பல கார் தயாரிப்பு நிறுவனங்கள், டீசல் கார்களைத் தயாரிக்க அதிக அளவில் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளன. இந்நிலையில், டீசல் கார்கள் மீதான வரி உயர்த்தப்பட்டால், அது இத்துறையின் வீழ்ச்சிக்கு வழி வகுக்கும் என்று இத்துறை சார்ந்தவர்கள் தெரிவித்தனர்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|