நிகர நேரடி வரி வசூல் ரூ.4.95 லட்சம் கோடியாக உயர்வுநிகர நேரடி வரி வசூல் ரூ.4.95 லட்சம் கோடியாக உயர்வு ... தங்கம் விலை சர்ர்ர்.... சவரனுக்கு ரூ.632 குறைவு தங்கம் விலை சர்ர்ர்.... சவரனுக்கு ரூ.632 குறைவு ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
"சென்செக்ஸ்' 195 புள்ளிகள் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஜூன்
2012
00:37

மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், வியாழக்கிழமையன்றும் சிறப்பாக இருந்தது. ஐரோப்பா மற்றும் இதர ஆசிய பங்கு சந்தைகளில், வர்த்தகம் சூடுபிடித்து காணப்பட்டது. குறிப்பாக, இதர ஆசிய பங்குச் சந்தைகளில், தொடர்ந்து, மூன்றாவது தினமாக நேற்றும், பங்கு வியாபாரம் நன்கு இருந்தது.இந்நிலையில், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு, ரிசர்வ் வங்கி, இம்மாதம், 18ம் தேதி அதன் காலாண்டு நிதி ஆய்வு கொள்கையில், வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை குறைக்கும் என, சந்தை வட்டாரத்தில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.இதனால், நேற்று, வங்கி துறை பங்குகளின் விலை, அதிகரித்து காணப்பட்டது.
இதுதவிர, மோட்டார் வாகனம், ரியல் எஸ்டேட், பொறியியல், உலோகம், நுகர்வோர் சாதனங்கள் உள்ளிட்ட பல துறைகளை சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 194.75 புள்ளிகள் உயர்ந்து, 16,649.05 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 16,680.59 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 16,519.89 புள்ளிகள் வரையிலும் சென்றது.
"சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், 25 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், 5 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி', 52.55 புள்ளிகள் அதிகரித்து, 5,049.65 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,059.65 புள்ளிகள் வரையிலும், குறைந்த பட்சமாக, 5,007.75 புள்ளிகள் வரையிலும் சென்றது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)