பதிவு செய்த நாள்
08 ஜூன்2012
00:37
மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், வியாழக்கிழமையன்றும் சிறப்பாக இருந்தது. ஐரோப்பா மற்றும் இதர ஆசிய பங்கு சந்தைகளில், வர்த்தகம் சூடுபிடித்து காணப்பட்டது. குறிப்பாக, இதர ஆசிய பங்குச் சந்தைகளில், தொடர்ந்து, மூன்றாவது தினமாக நேற்றும், பங்கு வியாபாரம் நன்கு இருந்தது.இந்நிலையில், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு, ரிசர்வ் வங்கி, இம்மாதம், 18ம் தேதி அதன் காலாண்டு நிதி ஆய்வு கொள்கையில், வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை குறைக்கும் என, சந்தை வட்டாரத்தில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.இதனால், நேற்று, வங்கி துறை பங்குகளின் விலை, அதிகரித்து காணப்பட்டது.
இதுதவிர, மோட்டார் வாகனம், ரியல் எஸ்டேட், பொறியியல், உலோகம், நுகர்வோர் சாதனங்கள் உள்ளிட்ட பல துறைகளை சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 194.75 புள்ளிகள் உயர்ந்து, 16,649.05 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 16,680.59 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 16,519.89 புள்ளிகள் வரையிலும் சென்றது.
"சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், 25 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், 5 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி', 52.55 புள்ளிகள் அதிகரித்து, 5,049.65 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,059.65 புள்ளிகள் வரையிலும், குறைந்த பட்சமாக, 5,007.75 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|