பதிவு செய்த நாள்
08 ஜூன்2012
10:23
மும்பை: இந்திய பங்குச்சந்தை வார வர்த்தகத்தின் இறுதி நாளான இன்று சரிவுடன் தொடங்கியது. இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கிய நேரத்தில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 95.38 புள்ளிகள் குறைந்து 16553.67 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 31.90 புள்ளிகள் குறைந்து 5017.75 புள்ளிகளோடு காணப் பட்டது.நாட்டின் பங்கு வர்த்தகம், நேற்று சிறப்பாக இருந்தது. ஐரோப்பா மற்றும் இதர ஆசிய பங்கு சந்தைகளில், வர்த்தகம் சூடுபிடித்து காணப்பட்டது. குறிப்பாக, இதர ஆசிய பங்குச் சந்தைகளில், தொடர்ந்து, மூன்றாவது தினமாக நேற்றும், பங்கு வியாபாரம் நன்கு இருந்தது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.55.15 ஆக இருந்தது. நேற்றைய மதிப்பை விட இன்று 21 காசுகள் குறைந்திருந்தது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|