பதிவு செய்த நாள்
09 ஜூன்2012
01:21
மும்பை:நடப்பு 2012ம் ஆண்டின் மே மாதத்தில், நிறுவனங்களுக் கிடை@ய மேற்கொள்ளப்பட்ட இணைத்தல் மற்றும் கையகப்படுத்தல் மதிப்பு, கடந்த
ஆண்டின் இதே மாதத்தை விட சரிவடைந்துள்ளது.சென்ற மே மாதத்தில், 68 இணைத்தல் மற்றும் கையகப்படுத்தலின் (தனியார் பங்கு முதலீடு உட்பட), மதிப்பு, 390 கோடி டாலராக (19 ஆயிரத்து 500 கோடி ரூபாய்) சரிவடைந்துள்ளது. ஆய்வு நிறுவனம்:அதேசமயம், கடந்த ஆண்டு மே மாதத்தில், 550 கோடி டாலர் (27 ஆயிரத்து 500 கோடி ரூபாய்) மதிப்பிற்கு, 100 இணைத்தல் மற்றும் கையகப்படுத்துதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
கடந்த 2010ம் ஆண்டு மே மாதத்தில், 72 நடவடிக்கைகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட, கையகப்படுத்தல் மதிப்பு 860 கோடி டாலராக (43 ஆயிரம் கோடி ரூபாய்) இருந்தது என, புள்ளியியல் தொகுப்பு மற்றும் ஆய்வு நிறுவனமான, கிராண்ட் துரோன்டன் தெரிவித்துள்ளது.சர்வதேச அளவில், ஏற்பட்டுள்ள பொருளாதார சுணக்க நிலையால், இந்தியாவில், மட்டுமின்றி, உலகின் பல்வேறு நாடுகளிலும் நிறுவனங்களின் இணைத்தல் மற்றும் கையகப்படுத்துதல் நடவடிக்கை குறைந்து போயுள்ளது.ரூபாயின் வெளிமதிப்பு:இந்நிலையில், மத்திய அரசின், ஊக்கம் அளிக்காத கொள்கை திட்டங்களும், டாலருக்கு எதிரான ரூபாயின் வெளி மதிப்பு, வரலாறு காணாத அளவிற்கு சரிவடைந்ததாலும் ஒட்டுமொத்த அளவில், இணைத்தல் மற்றும் கையகப்படுத்துதல் நடவடிக்கைகளில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது.மதிப்பீட்டு மாதத்தில், இந்திய நிறுவனங்கள், வெளி நாடுகளில் மேற்கொண்ட, இணைத்தல் மற்றும் கையகப்படுத்துதல் மதிப்பு, 95 லட்சம் டாலராக (4,750 கோடி ரூபாய்) குறைந்துள்ளது. சென்ற மே மாதத்தில், எட்டு நிறுவனங்கள், வெளி நாடுகளில், மேற்கண்ட நடவடிக்கைகளை மேற்கொண்டன. அதேசமயம், கடந்த 2011ம் ஆண்டு மே மாதத்தில்,
20 இந்திய நிறுவனங்கள், வெளி நாடுகளில், 226 கோடி டாலர் (11 ஆயிரத்து 300 கோடி ரூபாய்) மதிப்பிற்கு, இணைத்தல் மற்றும் கையகப்படுத்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது.கடந்த 2010ம் ஆண்டில், 19 நடவடிக்கைகளின் மூலம் மேற்கொண்ட, இதன் மதிப்பு, 400 கோடி டாலராக (20 ஆயிரம் கோடி ரூபாய்) இருந்தது.
அன்னிய நிறுவனங்கள்:இந்நிலையில், சென்ற மே மாதத்தில், 9 வெளிநாட்டு நிறு வனங்கள், அவற்றின் துணை நிறுவனங்கள் மற்றும் இந்திய நிறுவனங்களை இணைத்தல் மற்றும் கையகப்படுத்துதல் வாயிலாக மேற்கொண்ட, மதிப்பு, 210 கோடி டாலராக (10 ஆயிரத்து 500 கோடி ரூபாய்) உயர்ந்திருந்தது. இது, கடந்த 2011ம் ஆண்டில், 8 நடவடிக்கைகள் மற்றும் 132 கோடி டாலராகவும் (6,600 கோடி ரூபாய்), 2010ல் இந்த எண்ணிக்கை, 5 மற்றும் மதிப்பு 383 கோடி டாலராகவும் (19 ஆயிரத்து 150 கோடி ரூபாய்) உயர்ந்து காணப்பட்டது.நடப்பாண்டு மே மாதத்தில், தனியார் பங்கு முதலீட்டுத் திட்டத்தின் வாயிலாக, 27 வர்த்தக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இதன் மதிப்பு, 35 லட்சம் டாலராகும் (1,750 கோடி ரூபாய்). பிரமல் ஹெல்த்கேர்:இது, கடந்த 2011ம் ஆண்டு மே மாதத்தில், (43 நடவடிக்கைகள்) 114 கோடி டாலராகவும் (5,700 கோடி ரூபாய்) மற்றும் 2010ம் ஆண்டின் இதே மாதத்தில், (15 நடவடிக்கைகள்) 26 லட்சம் டாலர் (1,300 கோடி ரூபாய்) என்றளவிலும் இருந்தது.சர்வதேச அளவில், மேற்கொள்ளப்பட்ட இணைத்தல் மற்றும் கையகப்படுத்தல் நடவடிக்கையில், குறிப்பிடும் படியாக, இந்தியாவைச் சேர்ந்த பிரமல் ஹெல்த்கேர் நிறுவனம், 68 கோடி டாலர் (3,400 கோடி ரூபாய்) மதிப்பிற்கு, டெசிஷீன் ரிசோர்ஸ் குழுமத்தை கையகப்படுத்தியது என, கிராண்ட் துரோன்டன் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|