மே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட...நிறுவன கையகப்படுத்தல் மதிப்பு ரூ.19,500 கோடியாக சரிவுமே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட...நிறுவன கையகப்படுத்தல் மதிப்பு ரூ.19,500 ... ... டீசல்,  காஸ், கெரசின் விலை உயர்வு தற்போது இல்லை: மத்தி‌ய அரசு முடிவு டீசல், காஸ், கெரசின் விலை உயர்வு தற்போது இல்லை: மத்தி‌ய அரசு முடிவு ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பீ.எஸ்.இ. "சென்செக்ஸ்' 70 புள்ளிகள் உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜூன்
2012
01:22

மும்பை:நாட்டின் பங்கு வியாபாரம், வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமையன்று அதிக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது.அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவர் பென் பெர்னகி, அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், அறிவிப்பு ஏதும் வெளியிடவில்லை. மேலும், "பிட்ச்' தர மதிப்பீட்டு நிறுவனம், ஸ்பெயின் நாட்டின் நீண்டகால கடன்களுக்கான தரக்குறியீட்டை குறைத்தது.
இதையடுத்து, ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சுணக்கம் கண்டது. இதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது. இந்நிலையில், ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான "ரெப்போ ரேட்' விகிதங்களை 0.25 சதவீதம் குறைக்கும் என வங்கியாளர்கள் தெரிவித்த கருத்தால், மதியத்திற்கு பிறகு, இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சூடுபிடித்தது. இதையடுத்து, வங்கி, பொறியியல், ரியல் எஸ்டேட் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு அதிக தேவை ஏற்பட்டது.
மேலும், நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், நுகர் பொருட்கள், மின்சாரம் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளும் அதிக விலைக்கு கைமாறின.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 69.82 புள்ளிகள் அதிகரித்து, 16,718.87 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக, 16,767.77 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 16,485.02 புள்ளிகள் வரையிலும் சென்றது.
"சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், 21 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தும், 9 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி' 18.70 புள்ளிகள் உயர்ந்து, 5,068.35 புள்ளிகளில் நிலை பெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,084.45 புள்ளிகள் வரையிலும், குறைந்த பட்சமாக, 4,994.80 புள்ளிகள் வரையிலும் சென்றது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)