பதிவு செய்த நாள்
09 ஜூன்2012
01:22
மும்பை:நாட்டின் பங்கு வியாபாரம், வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமையன்று அதிக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது.அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவர் பென் பெர்னகி, அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், அறிவிப்பு ஏதும் வெளியிடவில்லை. மேலும், "பிட்ச்' தர மதிப்பீட்டு நிறுவனம், ஸ்பெயின் நாட்டின் நீண்டகால கடன்களுக்கான தரக்குறியீட்டை குறைத்தது.
இதையடுத்து, ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சுணக்கம் கண்டது. இதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது. இந்நிலையில், ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான "ரெப்போ ரேட்' விகிதங்களை 0.25 சதவீதம் குறைக்கும் என வங்கியாளர்கள் தெரிவித்த கருத்தால், மதியத்திற்கு பிறகு, இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சூடுபிடித்தது. இதையடுத்து, வங்கி, பொறியியல், ரியல் எஸ்டேட் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு அதிக தேவை ஏற்பட்டது.
மேலும், நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், நுகர் பொருட்கள், மின்சாரம் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளும் அதிக விலைக்கு கைமாறின.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 69.82 புள்ளிகள் அதிகரித்து, 16,718.87 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக, 16,767.77 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 16,485.02 புள்ளிகள் வரையிலும் சென்றது.
"சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், 21 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தும், 9 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி' 18.70 புள்ளிகள் உயர்ந்து, 5,068.35 புள்ளிகளில் நிலை பெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,084.45 புள்ளிகள் வரையிலும், குறைந்த பட்சமாக, 4,994.80 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|