பதிவு செய்த நாள்
09 ஜூன்2012
14:03
துபாய் : பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் கழகத்தால் மே மாதத்தில் கச்சா எண்ணெய் உற்பத்தி நாள் ஒன்றுக்கு 40,000 பேரலில் இருந்து 31.75 மில்லியன் பேரலாக அதிகரித்துள்ளதாக புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதத்தில் கச்சா எண்ணெய் உற்பத்தி நாள் ஒன்றிற்கு 31.71 மில்லியன் பேரலாக இருந்தது. இது 2008ம் ஆண்டு அக்டோபர் மாதம் இருந்த உற்பத்தி அளவான 32.26 மில்லியன் பேரலிற்கு பின் தற்போது தான் அதிகளவில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டின் ஜனவரி மாதத்தில் 30.87 மில்லியன் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் ஈரானின் கச்சா எண்ணெய் உற்பத்தி மே மாதத்தில் நாள் ஒன்றிற்கு 3.25 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் சவுதி அரேபியா முதலிடம் வகிக்கிறது. சவுதி அரேபியாவில் மே மாதத்தில் நாள் ஒன்றிற்கு 50,000 பேரல்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|