பதிவு செய்த நாள்
09 ஜூன்2012
15:17
டாடா நிறுவனம் கர்நாடக மாநிலத்தில் ஹவேரி மாவட்டத்தில் புதிய எஃகு ஆலையை அமைக்கிறது.இந்த ஆலை ஆண்டுக்கு 60 லட்சம் டன் அளவுள்ள எஃகு கையாளும். இந்த ஆலைக்கான முதலீட்டின் மதிப்பு ரூ. 35000 கோடியாகும். ரூ. 15000 கோடி முதலீட்டில் ஆண்டுக்கு முப்பது லட்சம் டன் எஃகு கையாளும் ஆலை அமைப்பதாக முதலில் திட்டமிடப்பட்டிருந்தது. பின்னர் டாடா இத்திட்டத்தை மேம்படுத்தியுள்ளது. கூடுதலாக ரூ.20000 கோடி முதலீட்டில் ஆண்டுக்கு அறுபது லட்சம் டன் எஃகு கையாளும் வகையில் புதிய ஆலை உருவாக்கப்படுகிறது. இதற்கான விருப்ப ஒப்பந்தத்தை டாடா ஸ்டீல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஹேமந்த் நேரூர்கர் கையெழுத்திட்டார். கர்நாடக அரசின் சார்பில் தொழிலக மேம்பாட்டு ஆணையர் மஹேஸ்வர் ராவ் கையெழுத்திட்டார். கர்நாடக அரசு நடத்திய இரு நாள் உலக முதலீட்டாளர் மாநாட்டில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|