பதிவு செய்த நாள்
11 ஜூன்2012
04:23
சென்ற ஆண்டைவிட, நடப்பாண்டில் மிளகாய் வற்றல் விலை, கி@லாவுக்கு 35 முதல் 40 ரூபாயாக Œரிவடைந்துள்ளது.உலகளவில் மிளகாய் உற்பத்தியில், இந்தியா, 43 சதவீத பங்களிப்புடன் முன்னிலை வகிக்கிறது. சீனா மற்றும் இதர நாடுகளின் பங்களிப்பு, முறையே 8.6 சதவீதம் மற்றும் 5.6 சதவீதமாக உள்ளன.
ஏற்றுமதி:உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மிளகாய் நல்ல தரத்துடன் இருப்பதால், வெளிநாடுகளுக்கு அதிகளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்திய நறுமணப் பொருட்கள் வாரியத்தின் அறிக்கைப்படி, 2011ம் ஆண்டு ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலத்தில், இந்தியாவிலிருந்து, உலகின் பல்@வறு நாடு களுக்கு, 54 ஆயிரத்து 400 டன் மிளகாய் வற்றல், ஏற்றுமதி செய்யப்பட்டது.சென்ற, 2010-11ம் நிதியாண்டில், மலேசியா, 4,554 டன், இலங்கை, 3,478 டன், வங்கதேசம், 2,817 டன் மிளகாய் வற்றலை ஏற்றுமதி செய்தன.மசாலா பொருட்கள் பதப்படுத்தும் தொழில் மிக வேகமாக வளர்ந்து வரும் நிலையில், உள்நாட்டில் அவற்றின் தேவை அதிகரித்துள்ளது. மிளகாய் உற்பத்தி, நடப்பாண்டு, 10 - 13 லட்சம் டன்னாக இருக்கும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடந்த ஆண்டு, 8 லட்சம் டன் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டது.
உள்நாட்டில், மிளகாய் உற்பத்தியில், ஆந்திர மாநிலம் 49 சதவீத பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து, கர்நாடகா (14 சதவீதம்), ஒடிசா( 7 சதவீதம்), மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், ராஜஸ்தான் (தலா 5 சதவீதம்), தமிழகம் (4 சதவீதம்) ஆகிய மாநிலங்கள் உள்ளன.
ஈரோடு வேளாண் துணை இயக்குனர் பரமசிவம் கூறியதாவது:தமிழகத்தில் உற்பத்தியாகும் மிளகாய் வற்றல், கோவில்பட்டி, சாத்தூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், கமுதி, முதுகுளத்தூர் மற்றும் விருதுநகர் உள்ளிட்ட சந்தைகளுக்கு, மார்ச் இரண்டாவது வாரம் வரத் துவங்கும். தற்போதுள்ள சூழ்நிலையில் விருதுநகர், சந்தைக்கு மட்டும் வற்றல் வந்து கொண்டிருக்கிறது.
சென்ற ஆண்டு, ஒரு கிலோ மிளகாய் வற்றல் விலை, 80 முதல் 90 ரூபாய் வரை இருந்தது. ஆனால், நடப்பாண்டு மிளகாய் விலை குறைந்து வருகிறது. விலை மேலும் அதிகரிக்குமா அல்லது இதே நிலை நீடிக்குமா என தெரியவில்லை.
விலை ஆ#வு:விவசாயிகள் நலன் கருதி, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் உள்ள மையத்தில், மிளகாய் வற்றலின் விலை நிலவரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அதில், ஏப்ரல் - மே மாதங்களில் ஒரு கிலோ மிளகாய் வற்றல் விலை, 53 முதல் 55 ரூபாய் வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்து என்பது குறிப்பிடத்தக்கது.
மிளகா# வற்றலின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றாலும், உலர வைத்தல் மற்றும் சேமிப்பதற்கான செலவுகளை கணக்கிட்டால் லாபம் கிடைக்க வாய்ப்பில்லை. எனவே, விவசாயிகள் மிளகாய் வற்றலை இருப்பு வைக்காமல் விற்பனை செய்வதே நல்லது. இவ்வாறு அவர் கூறினார்.- எம்.செல்வம் -
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|