பதிவு செய்த நாள்
12 ஜூன்2012
11:46
சென்னை : லேண்ட் லைன் கட்டணம் செலுத்தாத வாடிக்கையாளர்கள், "லேண்ட்லைன் மறு இணைப்பு மேளா'வில் பங்கேற்று துண்டிக்கப்பட்ட சேவையை பெறலாம் என, பி.எஸ்.என்.எல்., தெரிவித்துள்ளது. இது குறித்து, பி.எஸ்.என்.எல்., வெளியிட்ட செய்திக்குறிப்பு: லேண்ட் லைன் கட்டணம் செலுத்தாமல், இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ள வாடிக்கையாளர்கள் வசதிக்காக, பி.எஸ்.என்.எல்., "லேண்ட் லைன் மறு இணைப்பு மேளா'வை நடத்துகிறது. இம்மேளா, வரும் 30ம் தேதி வரை நடக்கிறது. இதில், கட்டணம் செலுத்தாமல் இணைப்பு துண்டிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள், தங்களுக்கான கட்டணத்தில், குறைந்த அளவு தொகையை செலுத்தி இணைப்பு பெறலாம். மீதமுள்ளவற்றை, மூன்று தவணைகளாக செலுத்தலாம். வெளி நாட்டு இணைப்பு துண்டிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள், முழு நிலுவைத் தொகையையும் செலுத்தியவுடன் இணைப்பு வழங்கப்படும். இது குறித்து மேலும் விவரங்களை அறிய, அருகிலுள்ள வாடிக்கையாளர் சேவை மையம் அல்லது, 1500 என்ற தொலைபேசி மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|