தங்கம் விலை சவரனுக்கு ரூ.88 உயர்ந்ததுதங்கம் விலை சவரனுக்கு ரூ.88 உயர்ந்தது ... சரக்கு போக்குவரத்து வளர்ச்சிக்கு தனியார் முதலீடு அவசியம்:ஜி.கே. வாசன் பேச்சு சரக்கு போக்குவரத்து வளர்ச்சிக்கு தனியார் முதலீடு அவசியம்:ஜி.கே. வாசன் ... ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
சீனாவால் நீலகிரி தைல வர்த்தகம் பாதிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2012
23:56

உதகை:யூகலிப்டஸ் என்ற மரத்தில் இருந்து எடுக்கப்படும் தைலம், "நீலகிரி தைலம்' என்ற பெயரில், விற்பனை செய்யப்படுகிறது. இந்த தைலம், சீனாவிலிருந்து குறைந்த விலையில், இறக்குமதி செய்யப்படுவதால், "நீலகிரி தைலம்' வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ள தாக, இத்துறையினர் தெரிவித்தனர்.
நீலகிரியில், ஒரு லிட்டர்,"நீலகிரி தைலம்', 6,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதேசமயம், சீனாவிலிருந்து இறக்குமதியாகும் இதே தைலம், லிட்டர் 2,000-2,500 ரூபாய்க்கு கிடைக்கிறது. இதனால், மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், சீன தைலத்தை பயன்படுத்த துவங்கியுள்ளன.
நீலகிரி மாவட்டத்தில், இவ்வகை தைலம் தயாரிப்பில், 400க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இத்தொழிற்சாலைகளில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். உலர்த்தப்பட்ட, 350 கிலோ, இலைகளிலிருந்து, ஐந்து லிட்டர் தைலம் தயாரிக்க முடியும். வாரம் ஒன்றிற்கு, இப்பகுதியில் தயாரிக்கப்படும், நீலகிரி தைலம், சென்னை மற்றும் கோல்கட்டாவிற்கு மிக அதிகளவில் அனுப்பி வைக்கப்படுகிறது.
சீனாவின் தைலத்துடன் உள்ளூர் தைலத்தை சிலர் கலந்து விற்கின்றனர். இதனால், நீலகிரி தைலத்தின் தரமும், அதன் மீதான நம்பிக்கையும் குறைந்து வருகிறது. எனவே, மத்திய, மாநில அரசுகள், சீனாவின் தைலத்திற்கு, கட்டுப்பாடு விதிக்க முன்வர வேண்டும் என,"நீலகிரி தைலம்' தயாரிப்பில் ஈடுபட்டுள்ள வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)