பதிவு செய்த நாள்
12 ஜூன்2012
23:56
உதகை:யூகலிப்டஸ் என்ற மரத்தில் இருந்து எடுக்கப்படும் தைலம், "நீலகிரி தைலம்' என்ற பெயரில், விற்பனை செய்யப்படுகிறது. இந்த தைலம், சீனாவிலிருந்து குறைந்த விலையில், இறக்குமதி செய்யப்படுவதால், "நீலகிரி தைலம்' வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ள தாக, இத்துறையினர் தெரிவித்தனர்.
நீலகிரியில், ஒரு லிட்டர்,"நீலகிரி தைலம்', 6,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதேசமயம், சீனாவிலிருந்து இறக்குமதியாகும் இதே தைலம், லிட்டர் 2,000-2,500 ரூபாய்க்கு கிடைக்கிறது. இதனால், மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், சீன தைலத்தை பயன்படுத்த துவங்கியுள்ளன.
நீலகிரி மாவட்டத்தில், இவ்வகை தைலம் தயாரிப்பில், 400க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இத்தொழிற்சாலைகளில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். உலர்த்தப்பட்ட, 350 கிலோ, இலைகளிலிருந்து, ஐந்து லிட்டர் தைலம் தயாரிக்க முடியும். வாரம் ஒன்றிற்கு, இப்பகுதியில் தயாரிக்கப்படும், நீலகிரி தைலம், சென்னை மற்றும் கோல்கட்டாவிற்கு மிக அதிகளவில் அனுப்பி வைக்கப்படுகிறது.
சீனாவின் தைலத்துடன் உள்ளூர் தைலத்தை சிலர் கலந்து விற்கின்றனர். இதனால், நீலகிரி தைலத்தின் தரமும், அதன் மீதான நம்பிக்கையும் குறைந்து வருகிறது. எனவே, மத்திய, மாநில அரசுகள், சீனாவின் தைலத்திற்கு, கட்டுப்பாடு விதிக்க முன்வர வேண்டும் என,"நீலகிரி தைலம்' தயாரிப்பில் ஈடுபட்டுள்ள வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|