பதிவு செய்த நாள்
12 ஜூன்2012
23:58
மும்பை:நாட்டின் பங்கு வியாபாரம் செவ்வாய்கிழமையன்று நன்கு இருந்தது. சென்ற ஏப்ரல் மாதத்திற்கான, நாட்டின் தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி, மதிப்பீட்டைவிட சரிவடைந்துள்ளதாக செய்தி வெளியானது. இதையடுத்து, ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான "ரெப்போ ரேட்' விகிதங்களை குறைக்கும் என்ற எதிர்பார்ப்பில், சில்லரை முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை வாங்கிக் குவித்தனர். இதனால், இந்திய பங்குச் சந்தை நேற்று ஏற்றம் கண்டது.
ஐரோப்பிய பங்குச் சந்தைகளிலும் வர்த்தகம் சூடுபிடித்து காணப்பட்டது. இருப்பினும், இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சுணக்கமாகவே இருந்தது.நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், ஆரோக்ய பராமரிப்பு துறையை தவிர்த்து, ஏனைய அனைத்து துறைகைளச் சேர்ந்த நிறுவனப் பங்குகளும் அதிக விலைக்கு கைமாறின. குறிப்பாக, வங்கி, ரியல் எஸ்டேட், பொறியியல், மோட்டார் வாகன துறையைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு அதிக தேவை இருந்தது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும்போது, 194.79 புள்ளிகள் அதிகரித்து, 16,862.80 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக, 16,897.42 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 16,553.47 புள்ளிகள் வரையிலும் சென்றது.
"சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களில், 25 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தும், 5 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி' 61.80 புள்ளிகள் உயர்ந்து, 5,115.90 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,128.90 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,015.15 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|