தங்கம் விலை சவரனுக்கு ரூ.88 உயர்ந்ததுதங்கம் விலை சவரனுக்கு ரூ.88 உயர்ந்தது ... நடப்பாண்டு ஏப்ரல் மாதத்தில்....தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி 0.1 சதவீதமாக சரிவு நடப்பாண்டு ஏப்ரல் மாதத்தில்....தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி 0.1 சதவீதமாக ... ...
சரக்கு போக்குவரத்து வளர்ச்சிக்கு தனியார் முதலீடு அவசியம்:ஜி.கே. வாசன் பேச்சு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2012
00:00

சென்னை:""நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முதுகெலும்பாக விளங்கும், சரக்கு போக்குவரத்து துறையை மேம்படுத்த, அரசு மட்டுமின்றி தனியார் முதலீடும் அவசியம்'' என, மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
பொருளாதாரம்:சென்னையில், இந்திய தொழிலக கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.) மற்றும் ஜி.சி.இ.எல்.நிறுவனம் சார்பில்,"சரக்கு போக்குவரத்தில் அடுத்த தலைமுறையினருக்கான வாய்ப்புகளும், சவால்களும்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி நடைபெற்றது.இதில், கருத்தரங்கு கை@யட்டை வாசன் வெளியிட்டு பேசியதாவது:
உலகமயமாக்கல் கொள்கைக்கு பின், நாட்டின் வர்த்தகம் சிறப்பாக வளர்ச்சி கண்டு வருகிறது. உலகின் முன்னணி நுகர்வோர் சந்தைகளில் ஒன்றாக உருவாகி வரும் இந்தியா, விரைவில் உலகின் முதல் மூன்று பொருளாதார வல்லரசு நாடுகளில் ஒன்றாக இடம்பெறும். மத்திய அரசு, நாட்டின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு, தனியாருடன் இணைந்து, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
செலவினம்: இந்தியாவின், மொத்த உள்நாட்டு உற்பத்தியில், சரக்கு போக்குவரத்து செலவினம், 13 முதல் 14 சதவீதம் என்றளவில் அதிகமாக உள்ளது. இது, வளர்ந்த நாடுகளில், 7 முதல் 8 சதவீதம் என்றளவில் குறைவாக உள்ளது. சரக்கு போக்குவரத்திற்கான, அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதன் மூலம், இந்த செலவை குறைக்கலாம்.
சரக்குபோக்குவரத்து துறையில், 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சரக்கு போக்குவரத்து மற்றும் துறைமுகங்களின் சரக்கு கையாளும் திறனை அதிகரித்தல் போன்றவற்றிற்கு, அதிகளவில் முதலீடு மேற்கொள்ளப் பட்டு வருகிறது. இத்துறையின் வளர்ச்சிக்கு அரசு மட்டுமின்றி தனியார் முதலீடும் அதிகரிக்க வேண்டும்.கடந்த 11வது ஐந்தாண்டு திட்ட காலத்தில், துறைமுகங்களின் சரக்கு கையாளும் திறன், 13.92 சதவீதம் என்றளவில் வளர்ச்சிகண்டுள்ளது. இதில், முக்கிய துறைமுகங்களின் வளர்ச்சி, 8.12 சதவீதமாகவும், சிறிய துறைமுகங்களின் வளர்ச்சி, 24.28 சதவீதம் என்றளவிலும் உள்ளது.
உற்பத்தி திறன்:நடப்பு 12வது ஐந்தாண்டு திட்ட காலத்தில், துறைமுகங்களின் சரக்கு கையாளும் திறன், 268 கோடி டன்னாகவும், சரக்கு கையாளுதல், 176 கோடி டன்னாகவும் உயரும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இதில், முக்கிய துறைமுகங்களின் சரக்கு கையாளும் திறன், 94 கோடி டன்னிலிருந்து, 123 கோடி டன்னாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. நடப்பாண்டில், துறைமுகங்களில், 42 திட்டங்கள் செயல்படுத்த அடையாளம் காணப்பட்டுள்ளது. இதில், 29 திட்டங்கள், தனியார் பங்களிப்புடன் செயல்படுத்த உள்ளன. இவ்வாறு வாசன் பேசினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)