சரக்கு போக்குவரத்து வளர்ச்சிக்கு தனியார் முதலீடு அவசியம்:ஜி.கே. வாசன் பேச்சுசரக்கு போக்குவரத்து வளர்ச்சிக்கு தனியார் முதலீடு அவசியம்:ஜி.கே. வாசன் ... ... இந்திய ரூபாயின் மதிப்பு 5 காசுகள் உயர்வு இந்திய ரூபாயின் மதிப்பு 5 காசுகள் உயர்வு ...
நடப்பாண்டு ஏப்ரல் மாதத்தில்....தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி 0.1 சதவீதமாக சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2012
00:03

புதுடில்லி:நடப்பாண்டு ஏப்ரல் மாதத்தில், நாட்டின் தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி (ஐ.ஐ.பி), 0.1 சதவீதமாக வீழ்ச்சி கண்டுள்ளது. இது, சென்ற ஆண்டு இதே மாதத்தில், 5.3 சதவீதம் என்றளவில் உயர்ந்து காணப்பட்டது.
மதிப்பீட்டு மாதத்தில், பொறியியல் மற்றும் தயாரிப்பு துறைகளின் உற்பத்தி சரிவடைந்து போனதே தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி வீழ்ச்சி கண்டுள்ளதற்கு முக்கிய காரணமாகும். மேலும், இது, நாட்டின் பொருளாதார மந்த நிலையை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
ரிசர்வ் வங்கி:இதையடுத்து, வரும் 18ம் தேதி நடைபெறவுள்ள நிதி ஆய்வுக் கொள்கை கூட்டத்தில், ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான "ரெப்போ ரேட்' விகிதங்களை குறைக்ககூடும் என்ற எதிர்பார்ப்பு வலுத்துள்ளது.நாட்டின் தொழில் துறை உற்பத்தியை கணக்கிடுவதில், தயாரிப்பு துறையின் பங்களிப்பு, 75 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. சென்ற ஏப்ரல் மாதத்தில், இத்துறையின் உற்பத்தி, 0.1 சதவீதம் என்ற மிக குறைந்த அளவிலேயே வளர்ச்சி கண்டுள்ளது. இது, கடந்த 2011ம் ஆண்டு இதே மாதத்தில், 5.7 சதவீதம் என்றளவில் மிகவும் அதிகரித்து காணப்பட்டது.
சென்ற ஏப்ரலில்,பொறியியல் சாதனங்கள் உற்பத்தி வளர்ச்சி, -16.3 சதவீதம் சரிவடைந் துள்ளது. இப்பிரிவு, கடந்த ஆண்டு இதே மாதத்தில், 6.6 சதவீதம் வளர்ச்சி கண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.அது போன்று, சுரங்கத் துறை உற்பத்தி வளர்ச்சியும், -3.1 சதவீதம் குறைந்துள்ளது. இத்துறை, கடந்த ஆண்டு இதே மாதத்தில், 1.6 சதவீதம் வளர்ச்சி கண்டிருந்தது.
மேற்கண்ட துறைகள் சரிவைக் கண்டுள்ள நிலையில், சென்ற ஏப்ரல் மாதத்தில், நுகர் பொருட்கள் துறையின் உற்பத்தி வளர்ச்சி 5.2 சதவீதமாக மிகவும் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில், இத்துறையின் வளர்ச்சி, 3.2 சதவீதம் என்ற அளவில் குறைந்திருந்தது.
நுகர்வோர் சாதனங்கள்:இதே போன்று, இதே மாதங்களில், நுகர்வோர் சாதனங்கள் துறை உற்பத்தி வளர்ச்சியும், 1.6 சதவீதத்தில் இருந்து, 5 சதவீதமாக உயர்ந்துள்ளது.இருப்பினும், சென்ற ஏப்ரலில், மின் உற்பத்தி துறை உற்பத்தி, 4.6 சதவீதம் என்ற மிக குறைந்த அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. இது, கடந்த ஆண்டு இதே மாதத்தில், 6.5 சதவீதம் என்றளவில் இருந்தது.கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், சென்ற ஏப்ரல் மாதத்தில், தயாரிப்பு துறையில் உள்ள, 22 தொழில் பிரிவுகளில், 12 பிரிவுகள் வளர்ச்சி கண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மறுமதிப்பீடு:மதிப்பீட்டு மாதத்தில், அடிப்படை பொருட்களின் உற்பத்தி, 2.3 சதவீதம் என்றளவிற்கே வளர்ச்சி கண்டுள்ளது. இது, கடந்த ஆண்டு இதே மாதத்தில், 7.1 சதவீதம் என்றளவில் மிகவும் அதிகரித்து காணப்பட்டது. இருப்பினும், இதே மாதங்களில், இடைநிலை பொருட்களின் உற்பத்தி வளர்ச்சி, 3.9 சதவீதத்தில் இருந்து 1.4 சதவீதமாக குறைந்துள்ளது.
அதேசமயம், சாதனங்கள் சாராத, நுகர்வோர் பொருட்களின் உற்பத்தி வளர்ச்சி, 4.6 சதவீதம் என்றளவிலிருந்து, 5.4 சதவீதமாக அதிகரித்துள்ளது.கடந்த 2011-12ம் நிதியாண்டில், நாட்டின் தொழில் துறை உற்பத்தி 2.8 சதவீதம் என்றளவில் இருக்குமென மறுமதிப்பீடு செய்யப் பட்டுள்ளது. கடந்த மாதம் வெளியிடப்பட்ட முந்தைய மதிப்பீட்டில் இது, 2.4 சதவீதமாக மதிப்பிடப்பட்டிருந்தது.
ஊடகம்:மேலும், பதிப்பகம், அச்சிடுதல் மற்றும் மறுபதிவு உள்ளிட்ட பிரிவு, மிக அதிகளவில் 52.7 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது. இதையடுத்து, மருத்துவ உபகரணங்கள் மற்றும் கண் கருவிகள் (29.4 சதவீதம்), வானொலி, தொலைக்காட்சி, தகவல் தொடர்பு சாதனங்கள் மற்றும் கருவிகள் (21.4 சதவீதம்) ஆகியவை வளர்ச்சி கண்டுள்ளன.மின் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் உற்பத்தி துறை 49.2 சதவீதம் என்றளவில் எதிர்மறை வளர்ச்சி கண்டுள்ளது. அலுவலக பயன்பாட்டு சாதனங்கள் (14.9 சதவீதம்) மற்றும் ஆடைகள் (9.1 சதவீதம்) ஆகிய பிரிவுகளும் வளர்ச்சி கண்டுள்ளன.
பிரணாப் கவலை: ""தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி ஏமாற்றம் அளிக்கிறது. எதிர்மறையான நிலை காணப்படுகிறது. இதை மாற்ற வேண்டும். தொழில்துறை வளர்ச்சிக்கு சாதகமான அறிகுறிகளை வழங்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்''

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)