பதிவு செய்த நாள்
13 ஜூன்2012
10:05
சிவகங்கை:உணவு உற்பத்தியை அதிகரிக்க விவசாயம், அதை சார்ந்த தொழில்களுக்கு வங்கி கடன் வழங்க (2012 - 2013) தமிழகத்திற்கு 51 ஆயிரத்து 910 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய விவசாயத்துறை உற்பத்தியை ஊக்கப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வங்கிகள் மூலம் விவசாயம், அதை சார்ந்த தொழில்களை ஊக்கப்படுத்த கடன் வழங்குவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
வங்கிகளில் நடப்பாண்டிற்கு கடன் வழங்கும் இலக்கினை பல மடங்கு அதிகரித்து, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம், வங்கிகள் தடையின்றி விவசாயம், அதை சார்ந்த தொழில்களுக்கு கடன் வழங்க வேண்டும். உணவு உற்பத்தியை பெருக்குவதற்கென அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு வங்கியாளர்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் என தெரிவித்துள்ளது. அதிகரிப்பு: தமிழக வங்கிகளுக்கு நடப்பாண்டிற்கு (2012-2013) கடந்த நிதிக்குழு கூட்டங்களில், ரூ.43 ஆயிரத்து 206 கோடியே 78 லட்சம் மட்டுமே ஒதுக்குவதென முடிவு செய்திருந்தது. தற்போது, உணவு உற்பத்தியை பெருக்கவேண்டிய கட்டாயத்தால், விவசாய கடனை அதிகளவில் வழங்க இலக்கினை 51 ஆயிரத்து 910 கோடி ரூபாயாக மத்திய அரசு அதிகரித்துள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|