பதிவு செய்த நாள்
13 ஜூன்2012
10:15
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் மூன்றாம் நாளான இன்று சரிவுடன் தொடங்கியது. இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கிய நேரத்தில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 32.88 புள்ளிகள் குறைந்து 16829.92 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 9.70 புள்ளிகள் குறைந்து 5106.20 புள்ளிகளோடு காணப் பட்டது.நாட்டின் பங்கு வியாபாரம் செவ்வாய்கிழமையன்று (நேற்று) நன்கு இருந்தது. சென்ற ஏப்ரல் மாதத்திற்கான, நாட்டின் தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி, மதிப்பீட்டைவிட சரிவடைந்துள்ளதாக செய்தி வெளியானது. இதையடுத்து, ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான "ரெப்போ ரேட்' விகிதங்களை குறைக்கும் என்ற எதிர்பார்ப்பில், சில்லரை முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை வாங்கிக் குவித்தனர். இதனால், இந்திய பங்குச் சந்தை நேற்று ஏற்றம் கண்டது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|