தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 உயர்ந்ததுதங்கம் விலை சவரனுக்கு ரூ.232 உயர்ந்தது ... பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் ஸ்டிரைக் பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் ஸ்டிரைக் ...
முதல் கார் வாங்க போறீங்களா? 5 விஷயங்களில் உஷார் தேவை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2012
14:17

இருசக்கர வாகனங்களில் செல்பவர்களின் அடுத்த கனவு என்பது கார் தான். ஆனால், இந்திய குடும்பத்தில், வீடு கட்ட செய்யும் முதலீடுக்கு அடுத்த படியாக, பெரிய அளவிலான முதலீடு என்பது கார் தான். எனவே, முதல் கார் வாங்கும் விஷயத்தில், அதிக கவனம் தேவை. முதல் கார் வாங்கும் போது ஐந்து விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று ஃபோர்டு இந்தியா நிறுவனம் டிப்ஸ் வழங்கியுள்ளது.
அவை வருமாறு:
1. உணர்வுகளை கட்டுப்படுத்துங்கள்: புதிதாக கார் வாங்குபவர்கள், மிகவும் உணர்ச்சி கொந்தளிப்பில் இருப்பார்கள். ஷோரூமில் சொல்லும் விஷயங்களில் கவனம் செலுத்த மாட்டார்கள். இதன் காரணமாகவே, கார் விலை எகிறிவிடும். எனவே, முதல் கார் வாங்கும் போது, உணர்ச்சி வசப்படவே கூடாது. முதல் கார் வாங்கும் இந்த தருணத்தை தொட, பல ஆண்டுகள் காத்திருந்து இருப்பீர்கள். எனவே, உணர்ச்சி வசப்படாமல், இருக்க வேண்டும். எனினும், ஃபோர்டு நிறுவனத்தின் ஃபிகோ அல்லது ஃபியஸ்டா கார் வாங்கினால், இந்த பிரச்னை உங்களுக்கு இல்லை.
2. பண வசதியில் கவனம்: வங்கி கடன் அல்லது நிதி நிறுவன கடன் மூலம் கார் வாங்குபவர்கள், மாதம் தோறும் செலுத்த வேண்டிய தொகை, தங்களின் பட்ஜெட்டில் அடங்குமா என்பதை கணிக்க வேண்டும். அகல கால் வைக்கவே கூடாது. உங்கள் பண வசதிக்கு ஏற்ற வகையில் உள்ள கார் மாடலேயே வாங்க வேண்டும். எனினும், உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற கார், ஃபோர்டு நிறுவனத்திடம் உள்ளது.
3. சமாளிக்க முடியுமா: கார் என்பது ஒரே கட்ட செலவு மட்டுமல்ல. அதன் பிறகு, காருக்கு போடும் பெட்ரோல் செலவு, சர்வீஸ் மற்றும் பராமரிப்பு செலவுகள் போன்ற விஷயங்களும் உள்ளன. இதையெல்லாம் சமாளிக்க முடியுமா என்று யோசிக்க வேண்டும்.
4.புரிந்து கொள்ளுதல் முக்கியம்: கார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் போடும் முன், அதில் கூறப்பட்டுள்ள விஷயங்களை புரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக, வாகன கடன் வட்டியை உஷாராக கவனிக்க வேண்டும். ஒப்பந்தத்தில் புரியாத விஷயத்தை, விளக்கம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.
5. சர்வீஸ் வசதி: முதல் கார் வாங்குபவர்கள், கார் சர்வீஸ் சென்டர், வீடு அல்லது அலுவலகம் அருகில் உள்ளதா என்பதை கவனிக்க வேண்டும். அந்த விஷயத்தில், ஃபோர்டு இந்தியா நிறுவனம் மிகவும் கவனமாக உள்ளது. நாடு முழுவதும், 123 நகரங்களில், 230 சேல்ஸ் அண்டு சர்வீஸ் சென்டர்கள், எங்களுக்கு உள்ளது என்று ஃபோர்டு இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)