பதிவு செய்த நாள்
13 ஜூன்2012
23:59
புதுடில்லி:கர்நாடகா, கேரளா மற்றும் தமிழகத்தில், பரவலாக மழை பெய்ததையடுத்து, நடப்பு சந்தைப்படுத்தும் பருவத்தில், இந்தியாவின் காபி உற்பத்தி, 53 லட்சம் மூட்டைகளாக (3.18 லட்சம் டன்) இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது, வரும் சந்தைப்படுத்தும் பருவத்தில், 51 லட்சம் மூட்டைகளாக (3.06 லட்சம் டன்) சற்று குறையும் என, கணிக்கப்பட்டுள்ளது.
வரும் 2012-13ம் சந்தைப்படுத்தும் (அக்டோபர்-செப்டம்பர்) பருவத்தில், இந்தியாவின் காபி ஏற்றுமதி, 5 சதவீதம் சரிவடைந்து, 55.10 லட்சம் மூட்டைகளாக (3.30 லட்சம் டன்) குறையும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் ஏற்றுமதி, நடப்பு சந்தைப்படுத்தும் பருவத்தில், 58.20 லட்சம் மூட்டைகளாக (3.49 லட்சம் டன்) இருக்கும் என, அமெரிக்க வேளாண் அமைச்சகம் (யு.எஸ்.டி.ஏ) தெரிவித்துள்ளது.கடந்த 2010-11ம் சந்தைப்படுத்தும் பருவத்தில், 58.70 லட்சம் டன்னாக இருந்த காபி ஏற்றுமதி, நடப்பு சந்தைப்படுத்தும் பருவத்தில் (2011-12)1 சதவீதம் குறைந்து, 58.20 லட்சம் டன்னாக குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|