பதிவு செய்த நாள்
14 ஜூன்2012
00:00
மும்பை:கடன் பிரச்னை, விமானிகளின் வேலை நிறுத்தப் போராட்டம் என பல்வேறு நெருக்கடிக்கு ஆளாகியுள்ள ஏர் இந்தியா நிறுவனம், ஐந்து போயிங் 777 விமானங்களை குத்தகைக்கு விட முடிவு செய்துள்ளது.அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு இயக்கப்பட்டு வந்த இந்த விமானங்களை குத்தகைக்கு விட, ஏர் - கனடாவுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், குத்தகை தொகையில் உடன்பாடு ஏற்படாததால், ஏர் இந்தியா, தற்போது ஒப்பந்தப் புள்ளிகளைக் கோரியுள்ளது.
ஏர் இந்தியாவிடம் 17 போயிங் விமானங்கள் உள்ளன. ஆனால், விமானிகளின் போராட்டத்தால், இவற்றில் பெரும்பாலானவை இயக்கப்படாமல் உள்ளன. இந்த வகையில் மட்டும், நாள்தோறும் ஏர் இந்தியாவிற்கு 5 - 7 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது.இதனால், ஐந்து விமானங்களை, 8 - 10 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விட்டு, மாதந்தோறும் நிலையான அளவில், வருவாய் ஈட்ட ஏர் இந்தியா திட்டமிட்டுள்ளது. பணியாளர், பராமரிப்பு, காப்பீடு என எதுவுமின்றி இவ்விமானங்கள் குத்தகைக்கு வழங்கப்பட உள்ளன.
ஏர் இந்தியா, விரைவில் 15 - 20 சதவீத எரிபொருள் சிக்கனம் கொண்ட, "டிரீம்லைனர்' விமானங்களை சேவையில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளது. இவை, போயிங் விமானங்களை விடக் குறைவாக, அதாவது 256 இருக்கைகள் கொண்டவை என்பதால், ஏர் இந்தியா, முழு பயணிகளுடன், குறைந்த செலவில் விமானங்களை இயக்க முடியும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|