பதிவு செய்த நாள்
14 ஜூன்2012
00:07
திருப்பூர்:"ஈமு கோழி வளர்ப்பில் முதலீடு செய்வதற்கு முன், அத்தொழில் குறித்து நன்கு தெரிந்து கொண்டு முதலீடு செய்யுங்கள்' என, திருப்பூர் மாவட்ட எஸ்.பி., ஆஸ்ரா கர்க் அறிவுறுத்தியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
திருப்பூர் மாவட்டத்தில், தற்போது ஈமு கோழிப்பண்ணை தொழில் வேகமாக பரவி வருகிறது. பல்வேறு நிறுவனங்கள் ஈமு கோழி வளர்ப்பு தொழில் குறித்தும், அதில் முதலீடு செய்தால் பெருத்த லாபம் சம்பாதிக்கலாம் எனவும், கவர்ச்சிகரமான விளம்பரங்கள் செய்து வருகின்றன.
1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால், மாதம் 7,000 ரூபாய் வரை வருமானம் பெறலாம்; ஊக்கத்தொகை, தங்க நாணயங்கள், இரு சக்கர வாகனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் பரிசாக வழங்கப்படும், இரண்டு ஆண்டுகள் கழித்து முதலீடு செய்த தொகையை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என, விளம்பரம் செய்கின்றன.
ஈமு கோழி பண்ணை நிறுவனங்கள், அவற்றின் லாபம் குறித்தோ, முதலீட்டாளர்களுக்கு அளிக்கப்படும் பங்கு குறித்தோ வெளிப்படையாக கூறுவதில்லை. மேலும், ஈமு கோழி, பொதுமக்களுக்கு வர்த்தக ரீதியில் எவ்வாறு பயன்படுகிறது என்பது குறித்தும் எவ்வித விவரத்தையும் தெளிவாக தெரிவிப்பதில்லை.எனவே, பொதுமக்கள், தங்கள் பணத்தை ஈமு கோழி வளர்ப்பில் முதலீடு செய்வதற்கு முன், அத்தொழில் குறித்து நன்கு தெரிந்து கொண்டு, அதன்பின், முதலீடு செய்ய வேண்டும். கவர்ச்சியான விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|