பதிவு செய்த நாள்
14 ஜூன்2012
00:18
சென்ற ஏப்ரலில், வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்.ஆர்.ஐ.,), இந்திய வங்கிகளில் 320 கோடி டாலர் அளவிற்கு டெபாசிட் செய்துள்ளதாக ரிசர்வ்வங்கி தெரிவித்துள்ளது. இது, சென்ற2011ம் ஆண்டு ஏப்ரலில்,40 கோடியே 70 லட்சம் டாலர் என்ற அளவிற்குத்தான் இருந்தது.வட்டி விகிதம் அதிகரிப்பு, அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி ஆகியவற்றால்,வெளிநாடு வாழ் இந்தியர்கள், இந்திய வங்கிகளில் டெபாசிட் செய்வது அதிகரித்து வருகிறது.
வட்டி விகிதம்:குறிப்பாக, வளர்ந்த நாடுகள் மற்றும் பாரசீக வளைகுடா பிராந்தியத்தில் நிலவும் வட்டி விகிதத்தை விட, இந்தியாவில் வட்டி விகிதம் அதிகமாக உள்ளது. இதனால், வெளிநாடு வாழ் இந்தியர்கள், அதிக அளவில் இந்திய வங்கிகளில் டெபாசிட் செய்து வருகின்றனர்.நடப்பாண்டு மார்ச் மாதத்தில், வெளிநாடு வாழ் இந்தியர்கள், இந்திய வங்கிகளில் 220 கோடி டாலர் அளவிற்கு டெபாசிட் செய்துள்ளனர்.
சென்ற 2011-12ம் நிதியாண்டில்,வெளிநாடு வாழ் இந்தியர்கள் 1,100 கோடி டாலர் அளவிற்கு இந்திய வங்கி களில் டெபாசிட் செய்துள்ளனர். இது, முந்தைய 2010-11ம் நிதியாண்டில் 320 கோடி டாலராக இருந்தது.இந்திய வங்கிகளில், நடப்பாண்டு ஏப்ரல் வரையிலான காலத்தில், வெளிநாடு வாழ் இந்தியர்கள் 5,880 கோடி டாலர் டெபாசிட் செய்துள்ளனர். இது, சென்ற ஆண்டு, இதே மாதத்தில் 5,230 கோடி டாலராக இருந்தது.
மதிப்பீட்டு காலத்தில், வெளிநாடு வாழ் இந்தியர்கள், இந்திய வங்கிகளில் மேற்கொண்ட என்.ஆர்.இ., டெபாசிட் டும் கணிசமாக அதிகரித்துள்ளது.நடப்பாண்டு ஏப்ரல் மாதத்தில், வெளிநாடு வாழ் இந்தியர்களின் என்.ஆர்.இ., டெபாசிட், 375 கோடி டாலராக உயர்ந்துள்ளது. இது, சென்ற 2011ம் ஆண்டு ஏப்ரலில்,27 கோடியே 70 லட்சம் டாலராகக் குறைந்து காணப்பட்டது.சென்ற 2011-12ம் நிதியாண்டின், இரண்டாவது அரையாண்டில், வங்கிகள், என்.ஆர்.இ., டெபாசிட்டிற்கான வட்டி விகிதங்களை உயர்த்தின. இதையடுத்து, வெளிநாடு வாழ் இந்தியர்கள், இவ்வகையில் மேற்கொண்ட டெபாசிட் அதிகரித்துள்ளது.
எப்.சி.என்.ஆர்-பீ :அன்னியச் செலாவணியை அதிக அளவில் ஈர்ப்பதற்காக, ரிசர்வ் வங்கி, என்.ஆர்.இ.,டெபா சிட்டுகளுக்கான உச்சவரம்பை உயர்த்தியுள்ளது.வட்டி ஆதாயம் பெறுவதற்காக மட்டுமின்றி, ரூபாய் மதிப்பில் ஏற்பட்டுள்ள சரிவையும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டுள்ளனர். அவர்கள் அன்னியச் செலாவணியில் மேற்கொண்ட,எப்.சி.என்.ஆர்-பீ.,டெபாசிட்டில் இருந்து குறிப்பிடத்தக்க தொகை யை எடுத்து, என்.ஆர்.இ., கணக்கில் டெபாசிட் செய்து வருகின்றனர்.
கடந்த 2010-11ம் நிதியாண்டில், எப்.சி.என்.ஆர்-பீ., கணக்கில், வெளிநாடு வாழ் இந்தியர்கள் 130 கோடி டாலர் டெபாசிட் செய்திருந்தனர்.சென்ற 2011-12ம் நிதியாண்டில்,இக்கணக்கில் இருந்து நிகர அளவில், 43 கோடி டாலர் முதலீட்டை திரும்பப் பெற்றுள்ளனர். அதே சமயம், நடப்பாண்டு, ஏப்ரல் மாதத்தில் மட்டும், இக்கணக்கில் இருந்து 66 கோடியே 20 லட்சம் டாலரை திரும்பப் பெற்றுள்ளனர்.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா:சென்ற மே மாதம், ரிசர்வ் வங்கி 1-3 ஆண்டு டெபாசிட்டிற்கான வட்டி விகித வரம்பை, "லிபார்' வட்டி விகிதத்தை விட, 1.25 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாக உயர்த்தியது.அது போன்று, 3 - 5 ஆண்டு டெபாசிட்டிற்கான வட்டி விகித வரம்பும், 1.25 சதவீதத்தில் இருந்து 3 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இது குறித்து, பொதுத் துறை வங்கியைச் சேர்ந்த உயரதிகாரி ஒருவர் கூறுகையில், வெளிநாடுகளில் உள்ள வட்டி விகிதத்தை விட, இந்தியாவில் எப்.சி.என்.ஆர்-பீ., டெபாசிட்டிற்கான வட்டி விகிதம் அதிகம் என்று தெரிவித்தார்.
தொழில்நுட்ப வல்லுனர்கள்:வெளிநாடு வாழ் இந்தியர்கள், குறிப்பாக தகவல் தொழில்நுட்ப வல்லுனர்கள் மற்றும் இதர அலுவலக ஊழியர்கள் தான், இந்த வட்டி உயர்வைப் பயன்படுத்தி, அதிக அளவில் டெபாசிட் செய்கின் றனர்.பொதுத் துறை வங்கிகளில் முதலிடத்தில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில், சென்ற 2011ம் ஆண்டு டிசம்பர் முதல் தற்போது வரை, என்.ஆர்.இ., டெபாசிட் 10 ஆயிரம் கோடி ரூபாய் அதிகரித்து, 69 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து-
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|