பதிவு செய்த நாள்
14 ஜூன்2012
11:08
புதுடில்லி : நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார சுணக்கம், தொழில்துறையில் ஏற்பட்டுள்ள உற்பத்தி சரிவு, உள்ளிட்டவைகளை குறித்து நாட்டின் முக்கிய தொழிலதிபர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி.
கடந்த சில பல மாதங்களாக இந்திய பொருளாதரம் கடும் மந்தநிலையை சந்தித்து வருகிறது. தொடர்ந்து வீழ்ந்து வரும் இந்திய ரூபாயின் மதிப்பு, அதிகரித்து வரும் பெட்ரோல் டீசல் விலை, தொழில்துறையில் ஏற்பட்டுள்ள உற்பத்தி சரிவு உள்ளிட்ட பல பிரச்னைகளால் மத்திய அரசு கடும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறது. இப்பிரச்னைகளுக்க தீர்வு காண மத்திய அரசும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த மாதத்தில் தொழில்துறை உற்பத்தி சரிவை சந்தித்து இருக்கிறது. இதற்கு தீர்வு காணும் விதமாக நாட்டின் முக்கிய தொழில் அதிபர்களை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ள பிரணாப் முகர்ஜி. இதற்காக டில்லியில் வருகிற ஜூன் 22ம் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளார் பிரணாப். அவர் தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில் முகேஷ் அம்பானி, அனில் அம்பானி, ரத்தன் டாடா, சுனில் பார்தி மிட்டல் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர். அப்போது உற்பத்தியை அதிகரிப்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார் பிரணாப். முன்னதாக இதேபோன்று தொழில் அதிபர்களுடன் சமீபத்தில் பிரதமர் மன்மோகன் சிங் ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|