பெண் டிரைவர்கள் சேவை அறிமுகம்பெண் டிரைவர்கள் சேவை அறிமுகம் ... யூரியா விலை உயர்வு ஒத்திவைப்பு யூரியா விலை உயர்வு ஒத்திவைப்பு ...
நடப்பு ஆண்டு மே மாதத்தில் நாட்டின் பணவீக்கம் 7.55 சதவீதமாக அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜூன்
2012
01:01

புதுடில்லி: நாட்டின் பொது பணவீக்கம், சென்ற மே மாதத்தில், 7.55 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது, சென்ற ஏப்ரல் மாதத்தை விட, 0.32 சதவீதம் (7.23 சதவீதம்) அதிகமாகும். அதேசமயம், கடந்த 2011ம் ஆண்டு, மே மாதத்தில், நாட்டின் பணவீக்கம், 9.56 சதவீதம் என்றளவில் மிகவும் அதிகரித்து காணப்பட்டது.

உணவு பணவீக்கம் : சென்ற மே மாதத்தில், ஒட்டுமொத்த உணவு பணவீக்கம், 10.74 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது, சென்ற ஏப்ரல் மாதத்தில், 10.49 சதவீதம் என்றளவில் குறைந்து காணப்பட்டது. மொத்த விலை குறியீட்டு எண் அடிப்படையில், கணக்கிடப்படும் பணவீக்கத்தில், உணவு பொருள்களின் பங்களிப்பு, 14.3 சதவீதம் என்றளவில் உள்ளது. நடப்பாண்டு மே மாதத்தில், உருளை கிழங்கின் விலை, 68.10 சதவீதம் உயர்ந்துள்ளது. அதேசமயம், கடந்த ஏப்ரலில், இது, 53.44 சதவீதமாக இருந்தது.

கோதுமை : கணக்கீட்டு மாதங்களில், பருப்பு வகைகள் மற்றும் கோதுமையின் விலை, முறையே, 16.61 சதவீதம் மற்றும் 6.81 சதவீதம் உயர்ந்துள்ளது. இருப்பினும், காய்கறிகள் விலை, 61 சதவீதம் என்றளவிலிருந்து, 49.43 சதவீதமாக குறைந்துள்ளது. முட்டை, இறைச்சி, மீன் போன்றவற்றின் விலை, கணக்கீட்டு மாதங்களில், 17.54 சதவீதம் என்றளவிலிருந்து, 17.89 சதவீதமாக அதிகரித்துள்ளது.அரிசி மற்றும் இதர தானியங்கள் விலை முறையே, 5.07 சதவீதம் மற்றும் 5.73 சதவீதம் உயர்ந்துள்ளது. கணக்கீட்டு மாதங்களில், வெங்காயத்தின் விலை, 12.11 சதவீதத்திலிருந்து, 7.23 சதவீதமாக குறைந்துள்ளது.

உணவு சாரா பொருட்கள் : சென்ற மே மாதத்தில், உணவு சாராத பொருட்களுக்கான பணவீக்கம், 5.02 சதவீதமாக குறைந்துள்ளது. இது, ஏப்ரல் மாதத்தில், 5.12 சதவீதமாக இருந்தது. நூலிழை, எண்ணெய் வித்துக்கள் போன்றவற்றின் விலை, 8.47 சதவீதமாக மிகவும் அதிகரித்துள்ளது. இவற்றின் விலை, சென்ற ஏப்ரலில், 1.61 சதவீதம் என்றளவில் இருந்தது. எரிபொருள் மற்றும் மின்சாரத்தின் விலை, ஆண்டு கணக்கில், 11.53 சதவீதம் உயர்ந்துள்ளது. இது, சென்ற ஏப்ரலில், 11.03 சதவீதம் என்றளவில் இருந்தது. எண்ணெய் வித்துக்களின் விலை, 19.18 சதவீதம் உயர்ந்துள்ளது. இது, சென்ற ஏப்ரலில், 16.66 சதவீதம் என்றளவில் இருந்தது. ஆண்டுகணக்கில், இதே மாதங்களில், தயாரிப்பு பொருட்கள் பிரிவின் கீழ் இடம்பெறும் உருக்கு பொருட்கள், 14.93 சதவீதம், சமையல் எண்ணெய், 10.53 சதவீதம், புகையிலை பொருட்கள், 7.80 சதவீதம், அடிப்படை உலோகம், 10.31 சதவீதம் உயர்ந்துள்ளது.

மார்ச் மாதம் ; கடந்த மார்ச் மாதத்தில், நாட்டின் பொது பணவீக்கம், தற்காலிக புள்ளி விவரத்தில், 6.89 சதவீதமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இது, மறு மதிப்பீட்டில், 7.69 சதவீதமாக உயர்ந்துள்ளது. ரிசர்வ் வங்கி, சென்ற ஏப்ரல் மாதத்தில், நாட்டின் தொழில் துறை உற்பத்தி, மதிப்பீட்டு அளவான, 1.7 சதவீதத்திற்கும் கீழ் மிகவும் குறைந்துள்ளது. இதேபோன்று, சென்ற மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, கடந்த ஒன்பது ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வீழ்ச்சிகண்டுள்ளது.

ரிசர்வ் வங்கி : நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு, ரிசர்வ் வங்கி, வரும் திங்களன்று, அதன் காலாண்டு நிதி ஆய்வு கொள்கையில், வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம், ரிசர்வ் வங்கி, "ரெப்போ' மற்றும் "ரிவர்ஸ் ரெப்போ' விகிதங்களை, 0.50 சதவீதம் குறைத்தது. இதுபோன்று, வரும் ஆய்வு கூட்டத்திலும், ரிசர்வ் வங்கி, மேற்கண்ட வட்டி விகிதங்களை குறைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2010 மற்றும் 2011ம் ஆண்டுகளில், நாட்டின் பணவீக்கம், 9.52 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்திருந்தது. இதனால், ரிசர்வ் வங்கி, 2010ம் ஆண்டு தொடக்கத்திலிலிருந்து, 2011ம் ஆண்டு அக்டோபர் வரை, வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை பல முறை உயர்த்தியது. இதன் காரணமாக, வங்கிகள் வழங்கும் கடனுக்கான வட்டி விகிதம் அதிகரித்தது. இதையடுத்து, நிறுவனங்கள், வங்கிகளிடமிருந்து கடன் பெறுவதை, வெகுவாக குறைத்து கொண்டன. இதனால், ஒட்டுமொத்த அளவில், தொழில் துறை உற்பத்தியில், கடும் சரிவு நிலை ஏற்பட்டது.

நிதி அமைச்சர் : பணவீக்கம் குறித்து மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியதாவது: நடப்பு நிதியாண்டில், நாட்டின் பணவீக்கம், 6.5-7.5 சதவீதம் என்றளவில் தான் இருக்கும். மேலும், இவ்வாண்டு பருவ மழை நன்கு இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே, வேளாண் உற்பத்தி அதிகரிக்கும். கடந்த ஆண்டை போன்று, இவ்வாண்டு நெருக்கடி நிலை இருக்க வாய்ப்பில்லை. உற்பத்தியாகும் வேளாண் பொருட்களை, நன்கு பாதுகாக்கும் வகையில், குளிர்பதன வசதிகளுடன் கூடிய கிடங்கு வசதிகள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு, அளிப்பை அதிகரிக்கும் வகையில், மத்திய அரசு, உரிய நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்துள்ளது. எனவே, பணவீக்கம் கட்டுக்குள் இருக்கும். இவ்வாறு பிரணாப் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)