பதிவு செய்த நாள்
15 ஜூன்2012
01:02
மும்பை: நாட்டின் பங்கு வியாபாரம் வியாழக்கிழமையன்று மோசமாக இருந்தது. நாட்டின் பணவீக்கம், சென்ற மே மாதத்தில், 7.55 சதவீதமாக அதிகரித்துள்ளது என்ற செய்தி வெளியானது. இது, இதற்கு முந்தைய ஏப்ரல் மாதத்தை காட்டிலும், 0.32 சதவீதம் உயர்வாகும். இதையடுத்து, பங்கு வர்த்தகம் சுணக்கம் கண்டது.அமெரிக்காவின் சில்லரை விற்பனை குறித்த புள்ளிவிவரத்தின் மூலம், அந்நாடு இன்னும் பொருளாதார பொருளாதார சுணக்க நிலையி
லிருந்து விடுபடவில்லை என்பதை உறுதிப்படுத்துவதாக உள்ளது. இது தவிர, கிரீஸ் நாட்டு தேர்தல், ஸ்பெயின் மற்றும் இத்தாலி நாடுகளில் ஏற்பட்டுள்ள கடன் நெருக்கடி போன்றவற்றால், ஐரோப்பா மற்றும் இதர ஆசிய நாடுகளிலும் பங்கு வர்த்தகம் மந்தமாகவே இருந்தது. நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், ரியல் எஸ்டேட், வங்கி,பொறியியல், மின்சாரம் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின. இருப்பினும், நுகர் பொருட்கள் உள்ளிட்ட ஒரு சில துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு ஓரளவிற்கு தேவை இருந்தது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும்போது, 202.63 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 16,677.88 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 16,921.49 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 16,658.98 புள்ளிகள் வரையிலும் சென்றது.
'சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், 25 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும், 5 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும் இருந்தது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 'நிப்டி' 66.70 புள்ளிகள் சரிவடைந்து, 5,054.75 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,130 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,047.60 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|