பதிவு செய்த நாள்
18 ஜூன்2012
00:13
ஓணம் பண்டிகையையொட்டி, ஈரோட்டில் புதிய ரக ஜவுளி துணிகள் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளன.இதையடுத்து, கேரள வியாபாரிகள் இப்போதே, "ஆர்டர்'களை குவிக்க தொடங்கியுள்ளனர்.கேரள மக்களின் புகழ்பெற்ற பண்டிகையான ஓணம் பண்டிகை, ஆக., 29ம் தேதி துவங்க உள்ளது. பண்டிகைக்கு, இரண்டு மாதங்களே உள்ள நிலையில், ஈரோடு ஜவுளி சந்தையில், புதிய வரவாக சந்தன நிறத்திலான சேலைகள் குவிந்துள்ளன.
பெரிய, சிறிய ஜரிகை சேரீஸ், ஜரிகை சுடிதார், ஜரிகை வேட்டி, காட்டன் சட்டைகள், குழந்தைகளுக்கான ஆடைகள் குவிக்கப்பட்டுள்ளன.சென்றாண்டு, ஓணம் பண்டிகையின் போது, கேரளாவில் முல்லைப் பெரியாறு பிரச்னை வலுப்பெற்றது. தமிழகத்தில் இருந்து செல்லும் லாரிகள், பஸ்கள் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால், கோடிக்கணக்கில் வர்த்தகம் முடங்கியது. அதேபோல், கேரள வியாபாரிகள், ஜவுளி துணிகளுக்கு கொடுத்த ஆர்டரை அனுப்ப முடியாமல், ஈரோட்டிலேயே துணிகள் தேங்கி கிடந்தன.
இதனால், வியாபாரிகள் பெருத்த ஏமாற்றம் அடைந்தனர்.ஓணம் பண்டிகைக்காக, இப்போதே கேரள வியாபாரிகள், ஈரோட்டுக்கு ஜவுளி கொள்முதல் செய்ய வந்த வண்ணம் உள்ளனர். சிலர் நேரடியாக ஜவுளி மில்களுக்கு சென்று ஆர்டர் கொடுத்து வருகின்றனர். ஓணம் பண்டிகைக்கான ஜவுளி துணி தேவை அதிகரித்துள்ளதால், ஈரோடு, திருப்பூர் மற்றும் நாமக்கல் பகுதியில் ஜவுளி தயாரிப்பு பணி தீவிரமாக நடக்கிறது.
மேலும் ஜவுளி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|