ரூ.1,020 கோடியில் புனேயில் புதிய ஆலை அமைக்கும் ஜெனரல் எலக்ட்ரிக்!ரூ.1,020 கோடியில் புனேயில் புதிய ஆலை அமைக்கும் ஜெனரல் எலக்ட்ரிக்! ... கடன் பத்திரங்கள் மூலம் நிறுவனங்கள் திரட்டிய தொகை ரூ.2.54 லட்சம் கோடி கடன் பத்திரங்கள் மூலம் நிறுவனங்கள் திரட்டிய தொகை ரூ.2.54 லட்சம் கோடி ...
வர்த்தகம் » ஜவுளி
ஈரோட்டில் குவியும் ஓணம் ஜவுளிகள்- எம்.செல்வம் -
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2012
00:13

ஓணம் பண்டிகையையொட்டி, ஈரோட்டில் புதிய ரக ஜவுளி துணிகள் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளன.இதையடுத்து, கேரள வியாபாரிகள் இப்போதே, "ஆர்டர்'களை குவிக்க தொடங்கியுள்ளனர்.கேரள மக்களின் புகழ்பெற்ற பண்டிகையான ஓணம் பண்டிகை, ஆக., 29ம் தேதி துவங்க உள்ளது. பண்டிகைக்கு, இரண்டு மாதங்களே உள்ள நிலையில், ஈரோடு ஜவுளி சந்தையில், புதிய வரவாக சந்தன நிறத்திலான சேலைகள் குவிந்துள்ளன.
பெரிய, சிறிய ஜரிகை சேரீஸ், ஜரிகை சுடிதார், ஜரிகை வேட்டி, காட்டன் சட்டைகள், குழந்தைகளுக்கான ஆடைகள் குவிக்கப்பட்டுள்ளன.சென்றாண்டு, ஓணம் பண்டிகையின் போது, கேரளாவில் முல்லைப் பெரியாறு பிரச்னை வலுப்பெற்றது. தமிழகத்தில் இருந்து செல்லும் லாரிகள், பஸ்கள் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால், கோடிக்கணக்கில் வர்த்தகம் முடங்கியது. அதேபோல், கேரள வியாபாரிகள், ஜவுளி துணிகளுக்கு கொடுத்த ஆர்டரை அனுப்ப முடியாமல், ஈரோட்டிலேயே துணிகள் தேங்கி கிடந்தன.
இதனால், வியாபாரிகள் பெருத்த ஏமாற்றம் அடைந்தனர்.ஓணம் பண்டிகைக்காக, இப்போதே கேரள வியாபாரிகள், ஈரோட்டுக்கு ஜவுளி கொள்முதல் செய்ய வந்த வண்ணம் உள்ளனர். சிலர் நேரடியாக ஜவுளி மில்களுக்கு சென்று ஆர்டர் கொடுத்து வருகின்றனர். ஓணம் பண்டிகைக்கான ஜவுளி துணி தேவை அதிகரித்துள்ளதால், ஈரோடு, திருப்பூர் மற்றும் நாமக்கல் பகுதியில் ஜவுளி தயாரிப்பு பணி தீவிரமாக நடக்கிறது.

Advertisement

மேலும் ஜவுளி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)