ரூ.1,020 கோடியில் புனேயில் புதிய ஆலை அமைக்கும் ஜெனரல் எலக்ட்ரிக்!ரூ.1,020 கோடியில் புனேயில் புதிய ஆலை அமைக்கும் ஜெனரல் எலக்ட்ரிக்! ... 'கிரிஷ்மா' மாம்பழக்கூழ் ஏற்றுமதி திட்டம் முடங்கியது 'கிரிஷ்மா' மாம்பழக்கூழ் ஏற்றுமதி திட்டம் முடங்கியது ...
கடன் பத்திரங்கள் மூலம் நிறுவனங்கள் திரட்டிய தொகை ரூ.2.54 லட்சம் கோடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2012
00:14

புதுடில்லி:இந்திய நிறுவனங்கள், சென்ற 2011-12ம் நிதியாண்டில், தனிப்பட்ட கடன்பத்திரங்கள் மற்றும் ஆவண ஒதுக்கீடுகள் வாயிலாக, 2 லட்சத்து 54 ஆயிரம் கோடி ரூபாயை திரட்டியுள்ளன. இது, கடந்த ஒன்பது நிதியாண்டுகளில் இல்லாத அதிகபட்ச அளவாகும்.மதிப்பீட்டு காலத்தில், நிறுவனங்கள், தனிப்பட்ட கடன்பத்திர ஒதுக்கீடு வாயிலாக, திரட்டிய தொகை 2 லட்சத்து 51 ஆயிரத்து 437 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டில், 1 லட்சத்து 92 ஆயிரத்து
225 கோடி ரூபாயாக குறைந்து காணப்பட்டது. ஆக, சென்ற நிதியாண்டில், 164 நிறுவனங்கள், தனிப்பட்ட கடன்பத்திர ஒதுக்கீடு வாயிலாக திரட்டிய தொகை 31 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.
கடந்த 2002-03ம் நிதியாண்டில், இந்திய நிறுவனங்கள், தனிப்பட்ட கடன்பத்திர ஆவண ஒதுக்கீட்டின் வாயிலாக திரட்டிய தொகை 48 ஆயிரத்து 424 கோடி ரூபாயாக இருந்தது. பின்பு இது, 2008-09 மற்றும் 2009-10ம் நிதியாண்டுகளில் முறையே, 1 லட்சத்து 74 ஆயிரத்து 327 கோடி ரூபாய் மற்றும் 1 லட்சத்து 89 ஆயிரத்து 490 கோடி ரூபாய் என்றளவில் படிப்படியாக உயர்ந்துள்ளது.சென்ற 2011-12ம் நிதியாண்டில், நாட்டின் நிதிச் சேவை நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் திரட்டிய தொகை 38 சதவீதம் உயர்ந்து, 1 லட்சத்து 60 ஆயிரத்து 369 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
அதேசமயம், தனியார் துறை நிறுவனங்கள் திரட்டிய தொகை 3 சதவீதம் சரிவடைந்து, 58 ஆயிரத்து 134 கோடி ரூபாயாக உள்ளது.சென்ற நிதியாண்டில், பொதுத் துறை நிறுவனங்கள், இவ்வெளியீடுகள் வாயிலாக திரட்டிய தொகை, 12 ஆயிரத்து 450 கோடியிலிருந்து, 27 ஆயிரத்து 176 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, மாநில அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் பொதுத் துறை நிறுவனங்கள் திரட்டிய தொகை 111 சதவீதம் அதிகரித்து, 1,981 கோடியிலிருந்து, 4,184 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
மேலும், மாநில நிதி அமைப்புகள் திரட்டிய தொகை, 10 சதவீதம் உயர்ந்து, 1,425 கோடியிலிருந்து, 1,575 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.சென்ற 2010-12ம் நிதியாண்டில், திரட்டப்பட்ட மொத்த தொகையில், அரசு அமைப்புகள் மற்றும் நிதி நிறுவனங்களின் பங்களிப்பு 78 சதவீதம் என்றளவில் உயர்ந்துள்ளது. இது, இதற்கு முந்தைய ஆண்டில், 69 சதவீதம் என்றளவில் இருந்தது. 

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)