பதிவு செய்த நாள்
18 ஜூன்2012
00:14
புதுடில்லி:இந்திய நிறுவனங்கள், சென்ற 2011-12ம் நிதியாண்டில், தனிப்பட்ட கடன்பத்திரங்கள் மற்றும் ஆவண ஒதுக்கீடுகள் வாயிலாக, 2 லட்சத்து 54 ஆயிரம் கோடி ரூபாயை திரட்டியுள்ளன. இது, கடந்த ஒன்பது நிதியாண்டுகளில் இல்லாத அதிகபட்ச அளவாகும்.மதிப்பீட்டு காலத்தில், நிறுவனங்கள், தனிப்பட்ட கடன்பத்திர ஒதுக்கீடு வாயிலாக, திரட்டிய தொகை 2 லட்சத்து 51 ஆயிரத்து 437 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டில், 1 லட்சத்து 92 ஆயிரத்து
225 கோடி ரூபாயாக குறைந்து காணப்பட்டது. ஆக, சென்ற நிதியாண்டில், 164 நிறுவனங்கள், தனிப்பட்ட கடன்பத்திர ஒதுக்கீடு வாயிலாக திரட்டிய தொகை 31 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.
கடந்த 2002-03ம் நிதியாண்டில், இந்திய நிறுவனங்கள், தனிப்பட்ட கடன்பத்திர ஆவண ஒதுக்கீட்டின் வாயிலாக திரட்டிய தொகை 48 ஆயிரத்து 424 கோடி ரூபாயாக இருந்தது. பின்பு இது, 2008-09 மற்றும் 2009-10ம் நிதியாண்டுகளில் முறையே, 1 லட்சத்து 74 ஆயிரத்து 327 கோடி ரூபாய் மற்றும் 1 லட்சத்து 89 ஆயிரத்து 490 கோடி ரூபாய் என்றளவில் படிப்படியாக உயர்ந்துள்ளது.சென்ற 2011-12ம் நிதியாண்டில், நாட்டின் நிதிச் சேவை நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் திரட்டிய தொகை 38 சதவீதம் உயர்ந்து, 1 லட்சத்து 60 ஆயிரத்து 369 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
அதேசமயம், தனியார் துறை நிறுவனங்கள் திரட்டிய தொகை 3 சதவீதம் சரிவடைந்து, 58 ஆயிரத்து 134 கோடி ரூபாயாக உள்ளது.சென்ற நிதியாண்டில், பொதுத் துறை நிறுவனங்கள், இவ்வெளியீடுகள் வாயிலாக திரட்டிய தொகை, 12 ஆயிரத்து 450 கோடியிலிருந்து, 27 ஆயிரத்து 176 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, மாநில அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் பொதுத் துறை நிறுவனங்கள் திரட்டிய தொகை 111 சதவீதம் அதிகரித்து, 1,981 கோடியிலிருந்து, 4,184 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
மேலும், மாநில நிதி அமைப்புகள் திரட்டிய தொகை, 10 சதவீதம் உயர்ந்து, 1,425 கோடியிலிருந்து, 1,575 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.சென்ற 2010-12ம் நிதியாண்டில், திரட்டப்பட்ட மொத்த தொகையில், அரசு அமைப்புகள் மற்றும் நிதி நிறுவனங்களின் பங்களிப்பு 78 சதவீதம் என்றளவில் உயர்ந்துள்ளது. இது, இதற்கு முந்தைய ஆண்டில், 69 சதவீதம் என்றளவில் இருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|