கடன் பத்திரங்கள் மூலம் நிறுவனங்கள் திரட்டிய தொகை ரூ.2.54 லட்சம் கோடிகடன் பத்திரங்கள் மூலம் நிறுவனங்கள் திரட்டிய தொகை ரூ.2.54 லட்சம் கோடி ... தனியார் துறை வங்கிகளை விட கிரெடிட் கார்டு வணிகத்தில் பொதுத்துறை வங்கிகள் வளர்ச்சி- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து - தனியார் துறை வங்கிகளை விட கிரெடிட் கார்டு வணிகத்தில் பொதுத்துறை ... ...
'கிரிஷ்மா' மாம்பழக்கூழ் ஏற்றுமதி திட்டம் முடங்கியது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2012
00:16

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து வெளி நாடுகளுக்கு, 'கிரிஷ்மா' மாம்பழக்கூழ் ஏற்றுமதி செய்யும் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், உற்பத்தி செய்த மாங்கூழை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வழி தெரியாமல், உற்பத்தி யாளர்கள் திணறி வருகின்றனர்.Œõகுபடி:கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 40 ஆயிரம் ஹெக்டேரில் மா சாகுபடி செய்து ஆண்டுக்கு, மூன்று லட்சம் டன் மாம்பழம் உற்பத்தி செய்யப்படுகிறது.
இங்கு அல்போன்சா, பெங்களூரா, செந்தூரா மற்றும் நீலம் உள்ளிட்ட மா ரகங்கள் வர்த்தக ரீதியாக பயிர் செய்யப்படுகிறது. மாவட்டத்தில் நிலவும் வறட்சியை தாங்கக் கூடிய பெங்களூரா ரகம் மொத்த சாகுபடி பரப்பில், 60 சதவீதம் பயிரிடப்பட்டுள்ளது. மாவட்டத்தில், 60 மாங்கூழ் தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளன. ஒரு தொழிற்சாலையில், ஒரு பருவத்தில் ஐந்து முதல் ஏழு ஆயிரம் டன் பழம் வரை மாங்கூழ் தயாரிக்கப்படுகிறது. அனைத்து தொழிற்சாலைகளிலும் சேர்த்து ஒருபருவத்தில், 90 ஆயிரம் டன் பழங்களில் இருந்து, 50 ஆயிரம் டன் மாம்பழக்கூழ் தயாரிக்கப்படுகிறது.
இவற்றில், 90 சதவீதம் சவூதி அரேபியா, துபாய், ஏமன், மலேசியா, சிங்கபூர் மற்றும் கிழக்கு ஐரோப்பியா நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு, 500 கோடி ரூபாய் அன்னிய செலாவணி கிடைக்கிறது.லாபம்:கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் மாங்கூழுக்கு பொதுவான பெயர் இல்லாததால், மாவட்டத்தில் உள்ள மாங்கூழ் தொழிற்சாலை உரிமையாளர்களுக்கு கிடைக்க வேண்டிய லாபம், வெளிநாட்டு வியாபாரிகளுக்கு கிடைத்து வந்தது.
இதை தவிர்க்கும் வகையில், 2006ம் ஆண்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து மா விவசாயிகள் மற்றும் மாங்கூழ் தொழிற்சாலை உரிமையாளர்கள் ஒன்று கூடி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தயாரிக்கப்படும் மாங் கூழுக்கு, 'கிரிஷ்மா' என்று பெயர் சூட்டி விற்பனை செய்வதென முடிவு எடுத்தனர்.
ஒத்துழைப்பு இல்லை:ஆனால், இந்த திட்டத்தை செயல்படுத்த தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இத்துடன், மேலும் பல்வேறு காரணங்களால், 'கிரிஷ்மா மாங்கூழ் ஏற்றுமதி திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், உற்பத்தி செய்த மாங்கூழை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வழி தெரியாமல், மா உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)