பதிவு செய்த நாள்
18 ஜூன்2012
00:16
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து வெளி நாடுகளுக்கு, 'கிரிஷ்மா' மாம்பழக்கூழ் ஏற்றுமதி செய்யும் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், உற்பத்தி செய்த மாங்கூழை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வழி தெரியாமல், உற்பத்தி யாளர்கள் திணறி வருகின்றனர்.Œõகுபடி:கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 40 ஆயிரம் ஹெக்டேரில் மா சாகுபடி செய்து ஆண்டுக்கு, மூன்று லட்சம் டன் மாம்பழம் உற்பத்தி செய்யப்படுகிறது.
இங்கு அல்போன்சா, பெங்களூரா, செந்தூரா மற்றும் நீலம் உள்ளிட்ட மா ரகங்கள் வர்த்தக ரீதியாக பயிர் செய்யப்படுகிறது. மாவட்டத்தில் நிலவும் வறட்சியை தாங்கக் கூடிய பெங்களூரா ரகம் மொத்த சாகுபடி பரப்பில், 60 சதவீதம் பயிரிடப்பட்டுள்ளது. மாவட்டத்தில், 60 மாங்கூழ் தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளன. ஒரு தொழிற்சாலையில், ஒரு பருவத்தில் ஐந்து முதல் ஏழு ஆயிரம் டன் பழம் வரை மாங்கூழ் தயாரிக்கப்படுகிறது. அனைத்து தொழிற்சாலைகளிலும் சேர்த்து ஒருபருவத்தில், 90 ஆயிரம் டன் பழங்களில் இருந்து, 50 ஆயிரம் டன் மாம்பழக்கூழ் தயாரிக்கப்படுகிறது.
இவற்றில், 90 சதவீதம் சவூதி அரேபியா, துபாய், ஏமன், மலேசியா, சிங்கபூர் மற்றும் கிழக்கு ஐரோப்பியா நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு, 500 கோடி ரூபாய் அன்னிய செலாவணி கிடைக்கிறது.லாபம்:கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் மாங்கூழுக்கு பொதுவான பெயர் இல்லாததால், மாவட்டத்தில் உள்ள மாங்கூழ் தொழிற்சாலை உரிமையாளர்களுக்கு கிடைக்க வேண்டிய லாபம், வெளிநாட்டு வியாபாரிகளுக்கு கிடைத்து வந்தது.
இதை தவிர்க்கும் வகையில், 2006ம் ஆண்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து மா விவசாயிகள் மற்றும் மாங்கூழ் தொழிற்சாலை உரிமையாளர்கள் ஒன்று கூடி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தயாரிக்கப்படும் மாங் கூழுக்கு, 'கிரிஷ்மா' என்று பெயர் சூட்டி விற்பனை செய்வதென முடிவு எடுத்தனர்.
ஒத்துழைப்பு இல்லை:ஆனால், இந்த திட்டத்தை செயல்படுத்த தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இத்துடன், மேலும் பல்வேறு காரணங்களால், 'கிரிஷ்மா மாங்கூழ் ஏற்றுமதி திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், உற்பத்தி செய்த மாங்கூழை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வழி தெரியாமல், மா உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|