பதிவு செய்த நாள்
18 ஜூன்2012
00:52
கொடைக்கானல்:கொடைக்கானலில் ஆப்பிள் விளைச்சல் அதிகரித்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.இங்கு விளையும் பிளம்ஸ், பேரி பழங்களுக்கு அடுத்தபடியாக, ஆப்பிளுக்கு வெளிமார்க்கெட்டில் கிராக்கி உண்டு. பழ மரங்களிலேயே கூடுதல் பராமரிப்பு செலவு, நீண்ட நாட்களுக்கு பிறகு மகசூல் என்பதால் குறைந்தளவிலேயே ஆப்பிள் பயிரிடப்பட்டுள்ளது.
ஜூன், ஜூலை மாதங்கள் மட்டுமே இவற்றின் மகசூல் இருக்கும். தற்போதுள்ள குளிர் சூழல் மற்றும் பருவமழையால் ஆப்பிள் மகசூல் சிறப்பாக உள்ளது. எதிர்பார்த்த அளவிற்கு பழங்கள் விளைந்துள்ளதால், சந்தையில் நல்ல விலை கிடைக்கும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
விவசாயி ராஜேந்திரன் கூறுகையில்,"கடந்த இரண்டு ஆண்டுகளாக பூச்சி தாக்குதல், பருவ மழையின்மையால் செலவழித்த பணத்தை கூட எடுக்க முடியாமல் அவதிப்பட்டோம். தற்போது ஆரம்ப நிலையிலேயே பழங்கள் நன்கு விளைந்துள்ளன. பிளம்ஸ் பழங்களுக்கு நிகராக ஆப்பிளும் விளையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது', என்றார்.தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் கி÷ஷார் கூறுகையில்,"விவசாயிகளுக்கு அதிக வருமானம் கிடைக்கும் வகையில், வெளிநாட்டிலிருந்து புது ரக ஆப்பிள் நாற்றுகளை வழங்க திட்டமிட்டுள்ளோம்'என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|