கொடைக்கானலில் ஆப்பிள் விளைச்சல் அதிகரிப்புகொடைக்கானலில் ஆப்பிள் விளைச்சல் அதிகரிப்பு ... தங்கம் விலை சற்று  குறைவு  தங்கம் விலை சற்று குறைவு ...
நெல் வரத்து 80 சதவீதம் சரிவு: அரிசி விலை "கிடுகிடு' உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2012
13:43

தேனி : மார்க்கெட்டிற்கு நெல் வரத்து, 80 சதவீதம் குறைந்து விட்டதால், அரிசி விலை, குவிண்டாலுக்கு, 300 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. தேனி, நெல்லை, விழுப்புரம் மாவட்டங்களிலும் திண்டிவனம், தஞ்சாவூர், மாயாவரம் பகுதிகளிலும் நெல் அறுவடை முடிந்து குறுவை சாகுபடி தொடங்குவதற்கு தாமதம் ஏற்பட்டு வருகிறது. மேட்டூர், பெரியாறு, வைகை அணைகள் தற்போது சாகுபடிக்காக திறக்க முடியாத நிலை உள்ளது. இதனால், சாகுபடிக்கு நிலத்தடி நீரை நம்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அரசும், இதற்காக 12 மணி நேரம் மும்முனை மின் சப்ளை வழங்குவதாக அறிவித்துள்ளது. குறுவை சாகுபடியால், மார்க்கெட்டிற்கு புது நெல் வர, இன்னும் நான்கு மாதங்களுக்கு மேல் ஆகும். தற்போது எல்லா இடங்களிலும், அறுவடை முடிந்து விட்டது. இருப்பு உள்ள நெல் மட்டுமே மார்க்கெட்டிற்கு வருகிறது. இதனால், வரத்து 80 சதவீதம் குறைந்து, அரிசி ஆலைகள் வாரத்தில் நான்கு நாட்கள் மூடப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அரிசி விலை உயர்வு: கர்நாடகா, ஆந்திராவில் இருந்து அனைத்து ரக அரிசியும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன.
அரசு நெல்லுக்கான ஆதார விலையை, கிலோவிற்கு, 12.50 ரூபாயாக உயர்த்தி உள்ளது. இருப்பினும், வெளிமார்க்கெட்டில், நெல் விலை, 13.50 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இதுபோன்ற காரணங்களால், அரிசி விலை, "கிடு கிடு'வென உயர்ந்துள்ளது. அனைத்து ரக அரிசியும், குவிண்டாலுக்கு, 300 ரூபாய் வரை உயர்ந்துள்ளன. மொத்த மார்க்கெட்டில், ஐ.ஆர்., 20 மற்றும் கல்சர் ரக அரிசி, 2,350 ரூபாய் ஆகவும், செல்லப்பொன்னி, 2,450 ரூபாய் ஆகவும், டீலக்ஸ், 2,600 ரூபாய் ஆகவும், கர்நாடகா பொன்னி, 3,100 ரூபாய் ஆகவும் உயர்ந்துள்ளது. சில்லரை மார்க்கெட்டில், அனைத்து ரக அரிசிகளும், மேலும் 200 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. "இன்னும் நான்கு மாதங்களுக்கு இந்நிலை நீடிக்கும்' என அரிசி வியாபாரிகள் தெரிவித்தனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)