பதிவு செய்த நாள்
20 ஜூன்2012
00:52
புதுடில்லி:நடப்பு நிதி ஆண்டில், நாட்டின் பருத்தி உற்பத்தி, கடந்த 2011-12ம் நிதி ஆண்டை விட, 10 சதவீதம் சரிவடையும் என, இந்திய ஜவுளி துறை கூட்டமைப்பின் தலைமை செயலர் டீ.கே.நாயர் தெரிவித்தார்.சென்ற நிதியாண்டில், பருத்தி உற்பத்தி அதிகரித்து, விலை குறைந்ததால், நடப்பாண்டில் நாடு தழுவிய அளவில் பல விவசாயிகள், சோயா,சோளம் உள்ளிட்ட மாற்று பயிர் சாகுபடியில் அதிக ஆர்வம் காட்டுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், நடப்பு நிதி ஆண்டில், உள்நாட்டில், 110 லட்சம் ஹெக்டேரில் தான், பருத்தி சாகுபடி மேற்கொள்ளப்படும் என தெரிகிறது.
இது, கடந்த நிதியாண்டில், 121 லட்சம் ஹெக்டேராக இருந்தது.கடந்த நிதியாண்டில், ஒரு கேண்டி (356 கிலோ), பருத்தியின் விலை, 63 ஆயிரம் ரூபாயாக இருந்தது. இது, தற்போது வீழ்ச்சி கண்டு, 33 ஆயிரம் முதல், 34 ஆயிரம் ரூபாயாக உள்ளது. இருப்பினும், கடந்த ஐந்தாண்டு கால விலையுடன் ஒப்பிடும் போது, இதன் சராசரி விலை தற்போது அதிகமாகவே உள்ளது என, நாயர் மேலும் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|