பதிவு செய்த நாள்
20 ஜூன்2012
00:54
சென்னை:எனர்ஜி ஆல்டர்நேட்டிவ் இந்தியா (இ.ஏ.ஐ.)., சார்பில், டீசலிலிருந்து மரபுசாரா எரிசக்திக்கு மாறுவது குறித்த "ரீ ஆக்ஷன் 2012' என்ற மாநாடு, வரும் ஜூலை மாதம் 26 மற்றும் 27 தேதிகளில், சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற உள்ளது.
இது குறித்து இ.ஏ.ஐ.யின் இயக்குனர் நரசிம்மன் சந்தானம் கூறியதாவது:இந்தியாவில் ஆண்டுக்கு, 6.5 கோடி டன் டீசல் பயன்படுத்தப்படுகிறது. இந்திய தொழில் துறையினர், டீசல் வழியிலான மின்னுற்பத்திக்கு மட்டும் 10,000 கோடி டாலர் செலவிடுகின்றனர். இதனால், பொருளாதார இழப்பு மட்டுமின்றி, சுற்றுப்புறச் சூழல் மற்றும் உடல் நலமும் பாதிக்கப்படுகிறது.
எனவே, இதற்கு மாற்றாக, சூரிய ஆற்றல், காற்று, உயிர்வேதி, கழிவுப் பொருள் மின்சாரம் தயாரிப்பு போன்ற மரபு சாரா எரிசக்திகளை முழுமையான அளவில் பயன்படுத்துவது குறித்து இம்மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது.மேலும், இத்துறையில் ஈடுபட்டு வரும் முன்னோடி நிறுவனங்களைச் சேர்ந்த நிபுணர்கள் தங்களின் அனுபவங்கள் மற்றும் சூழல் பாதுகாப்பு தீர்வுகளை அளிக்க உள்ளனர். இவ்வாறு சந்தானம் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|