பதிவு செய்த நாள்
20 ஜூன்2012
00:55
புதுடில்லி:அன்னிய முதலீடுகளை அதிகரிப்பதற்காக, அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளால், பலன் கிடைக்கத் துவங்கியுள்ளது என, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.அவர் மேலும் கூறியதாவது:அன்னிய வர்த்தகக் கடன்களைத் திரட்டுவதில் உள்ள கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. அடிப்படைக் கட்டமைப்பு கடன் நிதியம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இத்தகைய செயல்பாடுகளும் நல்ல அளவில் பயனளித்து வருகின்றன. குறிப்பிட்ட சில துறைகளில், சரியான நடவடிக்கை எடுக்க வேண்டி உள்ளது."பிட்ச்' நிறுவனம், பழைய தகவல்களின் அடிப்படையில், இந்தியாவின் கடன் தகுதி மதிப்பீட்டைக் குறைத்துள்ளது. மத்திய அரசு, அண்மையில் மேற்கொண்ட, உர மானிய சீர்திருத்தம், சில பொருட்களின் மானியங்களுக்கு வரம்பு நிர்ணயம் செய்தது, புதிய உற்பத்தி மற்றும் தொலைத் தொடர்புக் கொள்கைகள் உள்ளிட்டவற்றை "பிட்ச்' கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. இவ்வாறு பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|