பதிவு செய்த நாள்
20 ஜூன்2012
00:58
கடந்த சில ஆண்டுகளாக, தென்னாப்பிரிக்கா செல்லும் இந்திய சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரித்து வருகிறது. இது, சென்ற 2011ம் ஆண்டு 26.2 சதவீதம் உயர்ந்துள்ளது.
நடப்பாண்டு, ஜனவரி, பிப்ரவரி மாதங்களில், தென்னாப்பிரிக்கா சென்ற இந்திய சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை, 18 சதவீதம் அதிகரித்து, 14 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இது, சென்ற 2011ம் ஆண்டு, இதே காலங்களில் 11 ஆயிரத்து 864 ஆக இருந்தது.பிரŒõரம்:நடப்பு 2012ம் ஆண்டு, ஜனவரியை தொடர்ந்து, பிப்ரவரி மாதத்திலும்,தென்னாப்பிரிக்கா சென்ற இந்தியர்களின் எண்ணிக்கை, குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரித்துள்ளது.
சென்ற பிப்ரவரியில், இந்தியாவில் இருந்து 6,805 சுற்றுலா பயணிகள், தென்னாப்பிரிக்கா சென்றனர். இது, கடந்த 2011ம் ஆண்டு, பிப்ரவரியில் 5,449 ஆக இருந்தது. ஆக, இந்த எண்ணிக்கை 24.9 சதவீதம் அதிகரித்துள்ளது.இந்தியாவில் இருந்து அதிக அளவில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில், கடந்த 2010ம் ஆண்டு முதல், தென்னாப்பிரிக்கா சுற்றுலா துறை சார்பில், இந்தியாவில் பல்வேறு விழிப்புணர்வு பிரசார நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
"தென்னாப்பிரிக்காவை அறிந்து கொள்வோம்' என்ற தலைப்பில், சென்ற 12ம் தேதி பயிற்சி திட்டம் துவங்கப்பட்டுள்ளது. நாட்டின் 30 முக்கிய நகரங்களில் ஜூலை 28ம் தேதி வரை இந்நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
பயிற்சி முகாம்:சென்ற ஆண்டு 14 நகரங்களில் இந்தப் பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த முகாமில், சுற்றுலா துறை வல்லுனர்களுக்கு, தென்னாப்பிரிக்கா பயணத் திட்டங்களை உருவாக்கவும், சுற்றுலா பயணிகளின் தேவைகளைப் பூர்த்திசெய்வதற்கான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இதனால், தென்னாப்ரிக்கா வரும் இந்திய சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வரும் ஆண்டுகளில், இது மேலும் அதிகரிக்கும்' என, தென்னாப்பிரிக்க சுற்றுலா துறை, இந்திய பிரிவு மேலாளர் ஹனேலி ஸ்லாபர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|