பதிவு செய்த நாள்
20 ஜூன்2012
12:45
கம்பம் : தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கில், சாகுபடி செய்யப்பட்டுள்ள திராட்சைக்கு கூடுதல் விலை கிடைப்பதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கம்பம் பள்ளத்தாக்கில் பல்லாயிரம் ஏக்கரில், திராட்சை சாகுபடி செய்யப்படுகிறது. மழை மற்றும் பனிக் காலங்களில் திராட்சையில் சாம்பல் நோய், செவட்டை நோய் தாக்கி கடும் சேதத்தை ஏற்படுத்தும். தற்போது நோய் தாக்கம் இல்லாவிட்டாலும் விளைச்சல் குறைவாகவே உள்ளது.
திராட்சை விலை கிலோவிற்கு ரூ.35 வரை கிடைத்து வருகிறது. கடந்த வாரம் வரை கிலோவிற்கு ரூ. 28 தான் கிடைத்தது. நாளுக்கு நாள் விலை அதிகரித்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். திராட்சை விவசாயிகள் சங்க பொருளாளர் இருளாண்டி கூறியதாவது: பொதுவாக இந்த மாதங்களில் அதிக விலை கிடைப்பது வழக்கம் தான். இன்னும் சில மாதங்களுக்கு இந்த விலை கிடைக்கும். விளைச்சல் இல்லாததால், விலை கிடைத்தும் விவசாயிகளுக்கு பலன் இல்லை. தென்மேற்கு பருவமழை பெய்யத் துவங்கியுள்ளதால், இதனால் சாம்பல் நோய் தாக்கும் அபாயம் உள்ளது, என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|