பதிவு செய்த நாள்
20 ஜூன்2012
14:37
இந்தியாவில், ஸ்போர்ட்ஸ் யுடிலிட்டி வைக்கிள்( எஸ்.யு.வி.,) மற்றும் மல்டி யுடிலிட்டி வைக்கிள்(எம்.யு.வி.,) ஆகிய கார்கள் விற்பனையில் முன்னணியில் இருப்பது மஹிந்திரா மற்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தான். ஆனால், இந்த வாகனங்களை விளம்பரப்படுத்துவதில், மஹிந்திரா தான் தற்போது வரை முன்னணியில் இருந்து வருகிறது. பத்திரிகைகள் மற்றும் "டிவி' சேனல்களில் விளம்பரம் செய்வது முதல், நாடு முழுவதும் அவ்வப்போது வாகன அணிவகுப்புகள், பேரணி, வாகன பந்தயத்தில் பங்கேற்பது போன்ற விஷயங்களில் தீவிரமாக உள்ளது.
இந்த சூழ்நிலையில், இந்த விளம்பர யுத்த களத்தில், டாடா மோட்டார்ஸ் நிறுவனமம் இறங்கியுள்ளது. இதற்காக, " டாடா மோட்டார்ஸ் புல் த்ராட்டில் எக்ஸ்பிரீயன்ஸ், டாடா மோட்டார்ஸ் புல் த்ராட்டில் டிரைல்ஸ்' என்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில், முதல் நிகழ்ச்சி நாடு முழுவதும் 6 முறையும், இரண்டாவது நிகழ்ச்சி நாடு முழுவதும் 21 முறையும் நிகழ்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகன பிரிவில் இதுபோன்ற நிகழ்ச்சிகளை ராயல் என்ஃபீல்டு நிறுவனம் அவ்வப்போது நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|