பதிவு செய்த நாள்
21 ஜூன்2012
00:17
புதுடில்லி:நடப்பாண்டு, ஏப்ரல் மாதத்தில், இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட, அன்னிய நேரடி முதலீடு, 185.70 கோடி டாலராக (9,285 கோடி ரூபாய்) குறைந்துள்ளது.இது, சென்ற ஆண்டின் இதே மாதத்தில், மேற்கொள் ளப் பட்ட முதலீட்டைவிட,41 சதவீதம் (312 கோடி டாலர்-15 ஆயிரத்து 600 கோடி ரூபாய்)குறைவாகும் என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சென்றமார்ச் மாதத்தில், அன்னிய நேரடி முதலீடு, புதிய சாதனையாக 810 கோடி டாலர் (40 ஆயிரத்து500 கோடி ரூபாய்)என்ற அளவில் மிகவும் அதிகரித்துக் காணப்பட்டது.இதற்கு முன்னர்,சென்ற ஆண்டு, ஜூன் மாதம் தான், அன்னிய நேரடி முதலீடு மிகவும் அதிகமாக, அதாவது, 565 கோடி டாலர் (28 ஆயிரத்து 250 கோடி ரூபாய்) என்ற அளவில் இருந்தது.
சென்ற ஏப்ரல் மாதத்தில், மேற்கொள்ளப்பட்ட மொத்த அன்னிய நேரடி முதலீட்டில், சேவைத் துறையில், 45 கோடி டாலர் முதலீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், மருந்து (35 கோடி டாலர்), கட்டுமானம் (12 கோடி டாலர்), மின்சாரம் (6.80 கோடி டாலர்) ஆகிய துறைகளிலும் அன்னிய நேரடி முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மதிப்பீட்டு காலத்தில், மொரீஷியஸ், 63.30 கோடி டாலர் மதிப்பிற்கு, இந்தியாவில் முதலீடு செய்துள்ளது. இது தவிர, இங்கிலாந்து (36.60 கோடி டாலர்), நெதர்லாந்து (35.70 கோடி டாலர்), சிங்கப்பூர் (14.60 கோடி டாலர்), சைப்ரஸ் (6.90 கோடி டாலர்) ஆகிய நாடுகளும் இந்தியாவில் முதலீடு செய்துள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|